PAN Alert: இந்த 5 பணிகளை செய்ய PAN கார்ட் அவசியம், கவனத்தில் கொள்ளவும்

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அனைத்து சேவைகளும் இன்னும் எளிதாக நம்மை வந்தடைகின்றன. இந்த நிலையில், புதிய பான் கார்டைப் பெறுவதற்கு, விண்ணப்பத்தை நிரப்பி அது செயலாக்கப்படுவதற்கு நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. ஐ.டி துறை ஏற்கனவே இதற்கான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் உடனடியாக சில நிமிடங்களில் ஆன்லைனில் பான் கார்டைப் பெற்று விடலாம் என்ற வசதி உள்ளது. 

நிரந்தர கணக்கு எண் (PAN), விண்ணப்பதாரருக்கு வெறும் 10 நிமிடங்களில் PDF வடிவத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. e-PAN எனப்படும் இந்த மின்-பான் அட்டையும் ஃபிசிக்கல் பான் அட்டையைப் போல பயன்படும். இதுவும் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும். பான் கார்டு ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். இந்த ஐந்து பணிகளில் PAN அட்டை அவசியமாக தேவைப்படுகிறது.

1 /5

ரியல் எஸ்டேட்: நீங்கள் ரூ .5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு அசையா சொத்தை வாங்க திட்டமிட்டால், PAN அட்டையை வழங்க வேண்டியது கட்டாயமாக இருக்கும்.

2 /5

கிரெடிட் கார்டு- எந்தவொரு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிலும் PAN கார்டை வழங்குவது கட்டாயமாகும். மேலும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போதும் இதை வழங்க வேண்டும். 

3 /5

நீங்கள் ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை டெபாசிட் செய்தால், அந்த தொகை ரூ .50,000 க்கு மேல் இருந்தால், அந்த நிலையில் PAN கார்டு அவசியம் தேவை.

4 /5

ரூ .50,000 க்கு மேல் பரிவர்த்தனைகள்- நீங்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்கிறீர்கள் என்றால், PAN கார்டு மற்றும் ஆதார் அட்டை இரண்டையும் இணைப்பது முக்கியம். ஒரே நாளில், பாங்க் டிராஃப்டின் கேஷ் பர்சேஸ், பே ஆர்டர்கள், ரூ.50,000-க்கு மேலான காசோலைகளுக்கு PAN கார்டு தேவைப்படுகிறது.

5 /5

 நீங்கள் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேலான மதிப்பிலான செக்யூரிடிகளையோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் பத்திரங்களையோ வாங்கினால், PAN கார்டு தேவைப்படும்.