PM Kisan Yojana News: உங்க அக்கவுண்ட்டுக்கு ரூ.2,000 வந்திருச்சா? செக் எப்படி செய்வது?

PM Kisan திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6000 விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் எட்டாவது தவணைப் பணம் டெபாசிட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் வந்துவிட்டதா என்று எப்படி பார்ப்பது?

1 /4

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.  பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் எட்டாவது தவணை நிதியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று  காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவித்தார். இதன்படி 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,000 கோடி அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

2 /4

யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும்? இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.

3 /4

எட்டாவது தவணைப் பணம் வந்துவிட்டதா? பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்பதில் சென்று நீங்களே பணம் வந்துவிட்டதா இல்லையா என்று பார்க்கலாம். இந்த முகவரிக்கு சென்று அதில், ’Farmers Corner’ என்பதை கிளிக் செய்யவும். அதில், beneficiary status அல்லது beneficiary list என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அதில் புதிய திரை தென்படும். அதில் சென்று ஆதார் எண், மொபைல் எண் போன்ற விவரங்கள் வரும். அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் உங்களுக்குத் தேவையான தகவல் அதில் கிடைக்கும். ஒருவேளை உங்களது திரையில் ’FTO is generated and Payment confirmation is pending’ என்ற தகவல் குறிப்பு இருந்தால் உங்களது பணத்தை டெபாசிட் செய்யும் பணி நடந்துவருகிறது எதின்று அற்தம் ஆகும். 

4 /4

எட்டாவது தவணைப் பணம் வராவிட்டால் என்ன செய்வது? பணம் வந்துசேரவில்லை என்றால் அரசின் ஹெல்ப் லைன் எண்களுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். அதேபோல, மின்னஞ்சல் மூலமாகவும் புகார் செய்யலாம்.  PM Kisan Toll free Number: 18001155266 PM Kisan Helpline Number: 155261 PM Kisan Landline Number: 011-23381092, 23382401 PM Kisan Helpline:0120-6025109 Email முகவரி: pmkisan-ict@gov.in