யார் இந்த அருண் ஐபிஎஸ்? சென்னையின் காவல் ஆணையர் பற்றிய தகவல்கள்!

சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் ஐஏஎஸ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

சென்னை மாநகரின் 110வது காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பொறுப்பேற்றுள்ளார். இவர் 1998ம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வானவர்.

2 /6

அருண் ஐபிஎஸ் இதற்கு முன்பு நாங்குநேரி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் டிஎஸ்பியாகவும் கரூர், குமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் எஸ்பியாகவும் பணிபுரிந்துள்ளார்.

3 /6

மேலும் சென்னையில் அண்ணாநகர், புனித தோமையார்மலை உள்ளிட்ட இடங்களில் துணை ஆணையராக இதற்கு முன்பு பணியாற்றியுள்ளார்.

4 /6

சிபிசிஐடி பிரிவிலும் நீண்ட நாள் பணியாற்றிய அனுபவமும் அருணு அவர்களுக்கு உண்டு. 2012ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரகத்தில் ஐஜியாகவும், பிறகு திருச்சி மாநகரின் எஸ்பியாகவும் பதவி வகித்துள்ளார்.

5 /6

இதற்கு முன்பு சென்னையில் பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் பதவியை அருண் வகித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார்.  

6 /6

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கவனித்து வந்த அருண் தற்போது சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக சென்னை காவல் ஆணையராக இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.