PNB மோசடி: புதுவை இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம்!

பஞ்சாப் தேசிய வங்கியில் நடைப்பெற்றுள்ள ரூ.21306 கோடி மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்!

Last Updated : Feb 23, 2018, 05:47 PM IST
PNB மோசடி: புதுவை இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம்! title=

புதுவை: பஞ்சாப் தேசிய வங்கியில் நடைப்பெற்றுள்ள ரூ.21306 கோடி மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்!

பாஜக தலைமையிலான இந்த ஆட்சியில், இந்த மிகப் பெரிய வங்கி ஊழல் நடைப்பெற்றுள்ளதாகவும். இந்த ஊழலில் ஆளும் பாஜக-விற்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான இளைஞர், காங்கிரஸ் ஆர்வலர்கள் பதாகைகளை ஏந்தி இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் நிரவ் மோடி, லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோரின் புகைப்படங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி வந்தனர். மேலும் மத்தியில் ஆளும் பாஜக-விற்கு எதிர்பாகவும் கோஷங்களை எழுப்பி வந்தனர்.

Trending News