செம்மல் S. R அவர்களுக்கு இயற்றமிழ் வித்தகர் விருது!

எழுத்துச் செம்மல் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், இயற்றமிழ் வித்தகர் விருதும் / பொற்கிழியும் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது!

Last Updated : Mar 17, 2018, 12:55 PM IST
செம்மல் S. R அவர்களுக்கு இயற்றமிழ் வித்தகர் விருது! title=

எழுத்துச் செம்மல் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், இயற்றமிழ் வித்தகர் விருதும் / பொற்கிழியும் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது!

சென்னை கலைவாணர் அரங்கத்தில், வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளரும், பைந்தமிழ் மன்றத்தின் தலைவருமான வைகோ அவர்கள் எழுத்துச் செம்மல் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், இயற்றமிழ் வித்தகர் விருதும் / 50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கி அவரது நூல்களை ஆய்வு செய்து உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் தலைமை தாங்கினார். வரலாற்று ஆய்வாளர் செ.திவான் வரவேற்புரையாற்றினார் எழுத்தாளர் மதுரா, கவிஞர் தங்கமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சி.ஏ.ஆர்.சண்முகசிதம்பரம் நன்றி கூறினார்.

Trending News