Video: செல்ல நாய் உதவியுடன் வீட்டை விட்டு தப்பிய குழந்தை!

ஐக்கிய நாடுகளின் அரிசான் மாகனத்தை சேர்ந்த குழந்தை ஒன்று தன் வீட்டு வளர்ப்பு நாயுடன் இணைந்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jun 11, 2018, 03:55 PM IST
Video: செல்ல நாய் உதவியுடன் வீட்டை விட்டு தப்பிய குழந்தை! title=

ஐக்கிய நாடுகளின் அரிசான் மாகனத்தை சேர்ந்த குழந்தை ஒன்று தன் வீட்டு வளர்ப்பு நாயுடன் இணைந்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

அரிசான் மாகனத்தை சேர்ந்த தம்பதியர் கிரிஸ் மற்றும் நின்னா கார்டியல். இத்தம்பதியருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மிகவும் சுட்டித்தனமான இக்குழந்தையினை சமாளிக்க இயலாத இவர்கள் குழந்தையினை அறையில் வைத்து பூட்டி, CCTV கோமிரா உதவியால் கண்கானிப்பது வழக்கம். 

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று, சிறு வேலை காரணமாக வீட்டை விட்டு வெளிச்சென்ற இத்தம்பதியர்கள் தங்களது மகனை தனி அறையில் பாதுகப்பு ஏற்பாடுகள் செய்து பூட்டிச் சென்றுள்ளனர்.

ஆனால் இவர்களின் திட்டத்தினை சிதைக்கு வகையில் அவர்களது வீட்டு செல்ல நாய், குழந்தை இருந்த அறைக்குள் புகுந்து குழந்தையினை வெளியே அழைத்து சென்றுள்ளது. இந்த காட்சிகள் வீட்டின் CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவினை அரிசான் தம்பதியார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

மிகவும் வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோவானது, பார்ப்பவர்களின் மனதை கவர்ந்துவிடுவது மட்டுமல்லாமல், நாயுக்கும் மனிதற்கும் இருக்கும் உறவு பாலத்தினை அழகாக வெளிக்காட்டுகிறது.

Trending News