வீட்டில் இருந்த 3 ராட்ச மலைப்பாம்புகள்: தீயணைப்புத்துறையினருக்கு ஷாக் - வீடியோ

வீடு ஒன்றில் இருந்த 3 ராட்ச மலைப்பாம்புகளை பார்த்து, தீயணைப்புத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த மூன்று பாம்புகளையும் மீட்டனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 18, 2023, 08:34 PM IST
வீட்டில் இருந்த 3 ராட்ச மலைப்பாம்புகள்: தீயணைப்புத்துறையினருக்கு ஷாக் - வீடியோ title=

பாம்புகளுக்கு அடைகலம் இருப்பதற்கான இடம் கிடைத்தால் எங்கு வேண்டுமானாலும் அவை தங்கிக் கொள்ளும். அது வீடாக இருந்தாலும் சரி. அப்படி தான் மூன்று ராட்ச மலைப்பாம்புகள் வீடு ஒன்றின் மேற்கூரையில் தங்கியிருந்திருக்கின்றன. அவை மூன்றும் எப்படி வீட்டின் மேற்கூரைக்கு சென்றன என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. மிகப்பெரிய உயரமான வீடு. ஓட்டு வீடு என்பதால் அலங்காரத்துகாக சீட் அடித்துள்ளனர். அதில் இருக்கும் இடைவெளியை சரியாக பார்த்து பாம்புகள் அங்கு சென்று தங்கியிருக்கின்றன. முதலில் பார்க்கும்போது ஒரு பாம்பின் வால் மட்டும் தான் தெரிகிறது. அந்த ஒரு பாம்பை பிடிக்க தீயணைப்பு துறையினர் முற்படும்போது 3 பாம்புகள் இருப்பது தெரிய வருகிறது. இதனை பார்த்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | ‘இவருதாங்க காட்டோட கண் டாக்டர்..ஃபீஸ் கொஞ்சம் அதிகம்’: குரங்கு டாக்டர் வைரல் வீடியோ

 அந்த வீடியோவில் தீயணைப்பு துறையினர் வீடு ஒன்றுக்குள் செல்லும்போது, மேல் பகுதியில் பாம்பு வால் தெரிகிறது. ஒரு பாம்பு இருக்கிறது என நினைத்து அந்த ஊழியர் பாம்பின் வாலை பிடிக்க முற்படுகிறார். அவரின் பிடியில் சிக்காத பாம்பு வேகமாக மேற்கூரை சீட்டுக்குள் செல்ல முற்படுகிறது. ஆனால் அதனை மீண்டும் பிடிக்க முயற்சி செய்கிறார். அதற்குள் மற்றொருவர் பாம்பு உள்ளே செல்லாமல் இருக்க முன்பக்கமாக தட்டுகிறார். அப்போது தான் அந்த அதிர்ச்சி காட்சி அனைவருக்கும் தெரிய வருகிறது. ஏனென்றால் ஒரு பாம்புக்கு பதிலாக அங்கு 3 ராட்ச மலைப்பாம்புகள் இருக்கின்றன.

அனைவரும் ஒரு பாம்பு இருப்பதாக நினைக்க, இத்தனை பாம்புகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். இந்த வீடியோ இப்போது டிவிட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் பாம்புகள் திடீரென கீழே விழும்போது ஒருவிதமான பதட்டத்தை ஏற்படுத்துகிறது. எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும், ஒருவேளை பாம்பைக் கண்டால் பதட்டப்படாமல் தீயணைப்புத்துறையினரை அழைத்தால் எந்தவிதமான சேதாரம் யாருக்கும் ஏற்படாது என்பதையும் அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | பாம்புகளை செல்லமா தட்டி தூங்கவைக்கும் பெண்: காணக்கிடைக்காத வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News