நீர்யானையை கண்டு அஞ்சும் முதலை... காரணம் தெரியுமா...!

காட்டின் ராஜாவான சிங்கம் கூட ஒரு குளம் அல்லது ஏரிக்கு தண்ணீர் குடிக்கச் செல்லும்போது, ​​​​முதலை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கும். ஏனென்றால் தண்ணீரில் முதலை தாக்கினால் தாக்கு பிடிப்பது கடினம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 25, 2023, 01:00 AM IST
  • முதலை ஊர்வன வகை விலங்கின் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றாகும்.
  • நீர்யானை சிங்கத்தையும் வெல்லும்.
  • முதலைகள் நீர்யானை குட்டியை தனியாகக் கண்டால் தாக்கத் தயங்குவதில்லை.
நீர்யானையை கண்டு அஞ்சும் முதலை... காரணம் தெரியுமா...! title=

காட்டின் ராஜா சிங்கம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. காட்டின் ராஜாவாக இருந்தாலும், சிங்கத்தை விட வலிமையான பல விலங்குகள் உள்ளன. அதேபோல, 'தண்ணீரில் வாழும் முதலை மிகவும் பலசாலியானது; அதனை சீண்டாதீர்கள்' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள். அதன் மூலம் வலிமையை நீங்கள் புரிந்து கொள்ளலாம், காட்டின் ராஜாவான சிங்கம் கூட ஒரு குளம் அல்லது ஏரிக்கு தண்ணீர் குடிக்கச் செல்லும்போது, ​​​​முதலை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கும். ஏனென்றால் தண்ணீரில் முதலை தாக்கினால் தாக்கு பிடிப்பது கடினம். முதலை எந்த விலங்கையாவது தண்ணீரில் இழுத்துச் சென்றால், 'முதலை'யின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. ஆனால் முதலை நீர்யானையின் முன் வீரத்தை காட்டுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏன் முதலைகள் நீர்யானைகளை தாக்குவதில்லை? என்ற கேள்விக்கான பதிலை இந்த செய்தி மூலம் தருகிறோம்.

முதலை நீர்யானை தாக்காததற்கான காரணம்

முதலை நீர்யானையைத் தாக்காததற்கு முக்கியக் காரணம், அது அதைவிட வலிமையானது. நீர்யானை அளவில் மிகப்பெரியது மற்றும் மிகவும் ஆபத்தானது. அவர் தண்ணீரில் மிகவும் சுறுசுறுப்பானக இருக்க கூடியது. அதனால்தான் முதலைகள் நீர்யானைகளைத் தாக்குவதில்லை. நீர்யானை மற்றும் முதலை அருகருகே கிடப்பதை நீங்கள் பலமுறை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஆனால், முதலை அதனை தாக்க நினைக்காது. நீர்யானையின் வலிமைக்கு முன்னால் தன்னால் தாக்க முடியாது என முதலைக்கு இது நன்றாகத் தெரியும். ஆனால் முதலைகள் நீர்யானை குட்டியை தனியாகக் கண்டால் தாக்கத் தயங்குவதில்லை. நீர்யானை குட்டிகள் தண்ணீரில் உல்லாசமாக விளையாட விரும்புவதால், ஒரு பெண் நீர்யானை எப்போதும் குட்டி நீர்யானையுடன் இருக்கும். முதலைகள் எதுவும் தாக்கக் கூடாது என பாதுகாப்பிற்காக கூட இருக்கும்.

மேலும் படிக்க | நீர்யானை கூட்டத்தை தெறிக்க விட்ட ஒற்றை யானை! வைரலாகும் வீடியோ!

நீர்யானை சிங்கத்தையும் வெல்லும். ஹிப்போ மிகவும் கோபமான மற்றும் பெரிய விலங்கு. அதன் தோலும் மிகவும் தடிமனாக இருக்கும், இது தாக்குதலின் போது அதன் பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. குதிரை என்ற வார்த்தை நீர்யானை என்ற பெயருடன் தொடர்புடையது மற்றும் "ஹிப்போபொட்டமஸ்" என்ற வார்த்தையின் அர்த்தம் "நீர் குதிரை" அதாவது "நீர் குதிரை" ஆனால் குதிரைகளுடன் எந்த தொடர்பும் இல்லை. ஹிப்போ முக்கியமாக ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.

முதலை ஊர்வன வகை விலங்கின் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றாகும். இது 4 முதல் 25 மீட்டர் உயரம் வரை இருக்கலாம். உப்பு நீர் முதலைகள் உலகிலேயே பெரியவை. இவை 6.17 மீட்டர் உயரமும், ஒரு டன் எடையும் வரை வளரும். முதலை சராசரி வயது குறைந்தது 30-40 ஆண்டுகள்.

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News