அம்மானா சும்மாவா? சீண்டிய சிங்கத்தை விரட்டி அடித்த எருமையின் வைரல் விடியோ

Viral Video: மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, அம்மா அம்மாதான்!! தங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால், தாயால் தாங்கிக்கொள்ள முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 2, 2022, 12:24 PM IST
  • மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, அம்மா அம்மாதான்.
  • தங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால், தாயால் தாங்கிக்கொள்ள முடியாது.
  • தனது கன்றுக்காக சிங்கத்தை எதிர்கொள்ளும் எருமையின் வீடியோவை இங்கே காணலாம்.
அம்மானா சும்மாவா? சீண்டிய சிங்கத்தை விரட்டி அடித்த எருமையின் வைரல் விடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, அம்மா அம்மாதான்!! தங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால், தாயால் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு தாய் குழந்தையை காப்பாற்ற தனது புத்திசாலித்தனத்தை, தனது ஆற்றலை, தனது துணிவை என அனைத்தையும் பயன்படுத்தி விடுவார். 

காட்டின் மன்னர்களாக சுற்றி வரும் சிங்கங்களை பார்த்தால் அச்சப்படாத விலங்குகள் இருக்க முடியாது. எருமைகள் சிங்கங்களின் விருப்பமான உணவுகளாக இருக்கின்றன. அவை அதிக இறைச்சி கொண்ட பெரிய விலங்குகளாக இருப்பதால், சிங்கங்கள் இவற்றை விட்டுவைப்பதில்லை. சிங்கங்களால் இவற்றை வெற்றிகரமாக வேட்டையாட முடிந்தால், அவை சுமார் ஐந்து நாட்களுக்கு வேட்டையாட வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இது பற்றிய ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | நடுரோட்டில் சிங்கங்கள் செய்த சில்மிஷம்: வீடியோ வைரல்

தனது கூட்டத்திலிருந்து பிரிந்த எருமை கன்று குட்டி ஒன்றை சிங்கம் ஒன்று தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிங்கங்கள் பொதுவாகத் தங்கள் கூட்டத்திலிருந்து பிரிந்த அல்லது வெகு தூரத்தில் தனியாக இருக்கும் எருமைகள் மற்றும் கன்றுகளை தாக்குவது வழக்கம். ஒரு இடத்தில் தனியாக இருக்கும் கன்று ஒன்றை சிங்கம் ஒன்று தாக்கப் போவதை வீடியோவில் காண முடிகின்றது. 

எனினும், திடீரென்று, எருமை கன்றின் தாய் எருமை தனது கன்று ஆபத்தில் இருப்பதை கண்டுகொள்கிறது. அது சிங்கத்தை நோக்கி ஓடி வருகிறது. தாய் எருமை வருவதை பார்த்த பெண் சிங்கம், அச்சத்தின் உச்சிக்கு செல்கிறது. விசாலமான எருமைக்கு முன்னால் தன்னால் போராட முடியாது என அதற்கு தோன்றுகிறது. விட்டால் போதும் என அது அந்த இடத்தை விட்டு ஓடி விடுகிறது. 

அம்மா என்றால் சும்மா இல்லை என்பதை காட்டும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

bilal.ahm4d)

தாயின் பாசத்தை எடுத்துக்காட்டும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ‘bilal.ahm4d’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை 56,000 வியூஸ்களும் 1,700 லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | திகிலூட்டும் வைரல் வீடியோ: மனித தலையை கவ்வியபடி ஓடும் நாய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News