பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தற்கொலை: நிச்சயிக்கப்பட்டவரிடம் தங்கியிருந்த நிலையில் ஏன் தற்கொலை!

புடவை மூலம் தூக்கிட்டு பாண்டியன் ஸ்டோரேஸ் முல்லையான சித்ரா தற்கொலை செய்துகொண்டது தெரிவியவந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 9, 2020, 09:36 AM IST
    1. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை
    2. அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடக்க இருந்தது
    3. ஹேமந்த் ரவியுடன் தங்கியிருந்த நடிகை சித்ரா ஏன் தற்கொலை
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தற்கொலை: நிச்சயிக்கப்பட்டவரிடம் தங்கியிருந்த நிலையில் ஏன் தற்கொலை! title=

2018-ம் ஆண்டு முதல் ஒரு தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார். இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இன்று அதிகாலை சென்னை (Chennai) அருகே உள்ள நசேரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை (Suicide) செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ALSO READ | VJ Chithra Suicide: பாண்டியன் ஸ்டோரேஸ் முல்லை தற்கொலை: பிரபலங்கள் அதிர்ச்சி

பலரும் சமூக வலைதளங்களில் சித்ராவின் (Chitra) மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ராவில் உடலை கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். விரைவில் திருமணம் (Marriage) நடைபெறவிருந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார். தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். சித்ரா ஹேமந்த்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாக்வும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடக்க இருந்த நிலையில், ஹேமந்த் ரவியுடன் தங்கியிருந்த நடிகை சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்றும், படப்பிடிப்பில் சித்ராவிற்கு வேறு ஏதும் பிரச்னை இருந்ததா என்றும், ஹேமந்த் ரவியிடம் நசரத் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

ALSO READ | TV Serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா தற்கொலை காரணம் என்ன?

ஹேமந்த் ரவி, சொந்தமாகத் தொழில் செய்துவருகிறார். சித்ரா மற்றும் ஹேமந்த் ரவியின் திருமணம் பெற்றோரால் முடிவு செய்யப்பட்டு, நிச்சயம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News