அய்யய்யோ பயமா இருக்கே.. நபரை பதம் பார்க்கும் நாகப்பாம்பு: வீடியோ வைரல்

King Cobra Video: சமூக வலைதளங்களில் பாம்பின் அதிர்ச்சி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் ஒரு பாம்பு ஒன்று நபரை சிறைபிடித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 30, 2023, 09:36 AM IST
  • நபரை பிடித்து வைத்திருக்கும் நாகப்பம்பு
  • இன்றியாய வைரல் வீடியோ கட்டாயம் கிடுகிடுக்க வைக்கும்.
அய்யய்யோ பயமா இருக்கே.. நபரை பதம் பார்க்கும் நாகப்பாம்பு: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். நாகப்பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அதன்படி பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

மேலும் படிக்க | Viral Video: கிச்சு கிச்சு மூட்டியதால் குலுங்கி சிரிக்கும் பாம்பு: வைரல் வீடியோ

அந்தவகையில் சமீபத்திலும் ஒரு நாகப்பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. இதில் இந்த அதிர்ச்சி வீடியோவில் ஒரு நாகப்பாம்பு ஒரு நபரை இப்படியொரு நிலைக்கு ஆளாக்கியுள்ளது. தகவலின்படி, இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் வீடியோவை கண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர், அவ்வளவு பயங்கரமாக இருக்கிறது இந்த வீடியோ.

இந்த நிலையில் இந்த வீடியோவில் ஒரு நபர் மரத்தடியில் அமர்ந்திருப்பதையும், நாகப்பாம்பு அவரை சிறைபிடித்து வைத்திருப்பதையும் காணலாம். உண்மையில் அந்த நாகப்பாம்பு எப்படி அந்த நபரை பிடித்தது என்று தெரியவில்லை. இதுமட்டுமின்றி அச்சம் காரணமாக அந்த நபரின் நிலை மோசமானது. துளியும் அசையாமல் அந்த நபர் அப்படியே அங்கு அமர்திருந்தார். இந்த விசித்திரமான காட்சியை யாரோ ஒருவர் கேமராவில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

கிடுகிடுக்க வைக்கும் பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்: 

இந்த நாகப்பாம்பின் வைரலான வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Viral Video: அதிசய பறவைக்கு இயற்கை தந்த நெக்லஸ்.. உங்களை வியப்பில் ஆழ்ந்தும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News