மிரட்டல்கள் வரும்போது தான் என் குரல் வலிமைபெறும் -பிரகாஷ்ராஜ்!

கோழைகளே, இந்த வெறுப்பு அரசியலில் இருந்து எப்போது வெளியேறப் போகிறீர்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டம்!!

Last Updated : Jun 28, 2018, 03:01 PM IST
மிரட்டல்கள் வரும்போது தான் என் குரல் வலிமைபெறும் -பிரகாஷ்ராஜ்! title=

கோழைகளே, இந்த வெறுப்பு அரசியலில் இருந்து எப்போது வெளியேறப் போகிறீர்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டம்!!

கடந்த ஆண்டு எழுத்தாளர் கவுரி லங்கேஷ் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சமீபத்தில் கவுரி லங்கேஷ் கொலையில் சந்தேகிக்கப்படும் 6 பேரை சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அடுத்தடுத்து கொல்ல உள்ள நபர்களின் பெயர்கள் இருந்துள்ளது. அதில் நடிகர் கிரிஷ் கர்நாட், நடிகர் பிரகாஷ் ராஜ், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து, நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த சம்பவம் குறித்து ட்விட்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதல் அவர் தெரிவித்துள்ளதாவது..! 

பெங்களூருவில் முற்போக்கு சிந்தனையாளர், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை திட்டமிட்டு கொலை செய்தவர்கள், நடிகர் பிரகாஷ் ராஜையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்களாம் சிறப்பு புலனாய்வு பிரிவு கூறுகிறது. என்னுடைய குரலை ஒடுக்கும் வகையிலான மிரட்டல். ஆனால், இப்படி மிரட்டல்கள் வரும்போது, என் குரல் மேலும் வலிமைபெறும். கோழைகளே, நீங்கள் இந்த வெறுப்பு அரசியலில் இருந்து எப்போது வெளியேறப்போகிறோம் என நினைத்துப்பார்க்கிறீர்களா என தெரிவித்துள்ளார். 

 

Trending News