Viral Video: குழிக்குள் சிக்கிய குட்டி; காப்பாற்றப் போய் சிக்கிக் கொண்ட தாய் யானை

Elephant Viral Video: குட்டி யானை ஒன்று குழியில் விழுந்த நிலையில், அதனை காப்பாற்றப் போன் தாய் யானையும் குழிக்குள் சிக்கிக் கொண்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 15, 2022, 07:16 PM IST
  • குட்டி அதன் தாயுடன் மீண்டும் இணைந்த காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.
  • குழியில் குட்டி விழுந்த உடன் அதனை காப்பாற்ற தாய் யானை முயற்சி செய்கையில், அதுவும் குழியில் சிக்கிக் கொண்டது.
Viral Video: குழிக்குள் சிக்கிய குட்டி; காப்பாற்றப் போய் சிக்கிக் கொண்ட தாய் யானை title=

தாய் பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமான உணர்வு அல்ல. உலகில் எந்த வகை உயிரினமாக இருந்தாலும் சரி, அதன் குட்டிகள் மீது தாய் வைத்திருக்கும் பாசம் என்பது வார்த்தையால்  விளவரிக்க முடியாதது. மனிதர்கள் ஆனாலும்  சரி, விலங்குகள் ஆனாலும் சரி தனது குழந்தைகளை  தனது உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்று தான் போராடும். அந்த வகையில், சமூக வலைதலங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில் இருந்து அறிந்து கொள்ளலாம்.  சின்ன குழியில் சிக்கிக் கொண்ட தனது குட்டியை காப்பாற்ற போய், தான் சிக்கிக் கொண்ட பரிதாப நிலையை காட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில்  குட்டி யானை ஒன்று, குழியில் விழுந்து விட்டது. தனது குட்டி விழுந்த உடன் அதனை காப்பாற்ற தாய் முயற்சி செய்கையில், அதுவும் குழியில் சிக்கிக் கொண்டது. இந்த இரு யானைகளும்  வியத்தகு முறையில் மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய் யானை மயக்கமடைந்த நிலையில், குட்டி யானையை வெளியே இழுக்க, கால்நடை மருத்துவர்கள் பூம் லிப்ட் உட்பட பல கருவிகளைப் பயன்படுத்தினர்.

நகோன் நயோக் மாகாணத்தில் உள்ள ராயல் ஹில்ஸ் கோல்ஃப் மைதானத்தின் புறநகரில் உள்ள வடிகால்  குழியில் விழுந்த யானைக்குட்டியை பற்றி அதிகாரிகளுக்குத் தெரியவந்ததை அடுத்து, புதன்கிழமை அதிகாலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தாயும், குட்டி யானையும் குழியில் சிக்கிக் கொண்டதை பற்றி,  அவ்வழியாகச் சென்ற வழிப்போக்கர் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்கும், காவ் யாய் தேசியப் பூங்கா அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை

முதலில் தாய் யானை, தனது குட்டியை தாக்க வருகிறார்களோ என எண்ணி, அவர்களை விரட்ட வே முயன்றதால்,  தாய் யானைக்கு மூன்று டோஸ் ட்ரான்குவிலைசர்ஸ் கொடுக்கப்ப்பட்டு பின்னர் குட்டியானையையும் தாய் யானையையும் காப்பாற்றினர்.  பின்னர் மயங்கி இருந்த யானையை உயிர்ப்பிக்கப்பட்டு,  இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் குட்டி அதன் தாயுடன் மீண்டும் இணைந்த காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News