Viral Video: கணவனையும் கள்ளக்காதலியையும் துவம்சம் செய்த மனைவி

வாய்ச் சண்டையாக ஆரம்பித்தது சிறிது நேரம் கழித்து உடல் ரீதியான தாக்குதலாக மாறியது. கணவரின் தலைமுடியை பிடித்து செருப்பால் அடுத்த மனைவி.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Nov 5, 2021, 03:00 PM IST
Viral Video: கணவனையும் கள்ளக்காதலியையும் துவம்சம் செய்த மனைவி title=

போபால்: கடந்த அக்டோபர் 15-ம் தேதி போபாலின் கோ-இ-ஃபிசா பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தனது கணவனை மற்றொரு பெண்ணுடன் கையும் களவுமாகப் பிடித்த பிறகு நடந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. தனது கணவருடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து கணவனையும் மற்றொரு பெண்ணையும் சரமாரியாக அடித்த மனைவி. 

அந்த வீடியோவில், 30 வயதான பெண் மற்றும் அவரது சகோதரி இருவரும், கணவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஜிம்மிற்கு சென்றுள்ளார். நீண்ட நாட்களாக கணவர் மீது சந்தேகம் இருந்ததால் அவரை பின்தொடர்ந்து சென்றதாக தெரிகிறது. 

ஜிம்மிற்கு வந்த அவர்கள், அந்த பெண்ணுடன் தனது கணவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். இருப்பினும், அவர் தனது குற்றச்சாட்டை மறுத்து, அவரை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார். வாய்ச் சண்டையாக ஆரம்பித்தது சிறிது நேரம் கழித்து உடல் ரீதியான தாக்குதலாக மாறியது. 

அவரது மனைவி, அந்த பெண்ணை செருப்பால் அடிக்கத் தொடங்கியபோது கணவர் தலையிட்டு தடுத்ததால், கணவரின் தலைமுடியை பிடித்து வெளியே இழுத்து, செருப்பால் பலமுறை அனைவரின் முன் தாக்கினார்.

ALSO READ |  மனைவி மீது ஆசிட் ஊற்றிய கொடூர கணவன்!

ஜும்க்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு, இப்படி மற்றொரு பெண்ணுடன் சுற்றுகிறாய், உனக்கு வெட்கமாக இல்லை. வீட்டில் குழந்தை, மனைவி இல்லையா எனக் கேட்டப்படியே செருப்பால் படார், படார் என்று அடிக்கிறார். அவளது கணவனும் எனக்கும் அவளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். 

ஆனாலும் மீண்டும் அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து தாக்குகிறார். மனைவியுடன் சேர்ந்து அவரது சகோதரியும் அந்த பெண்ணை தாக்குகிறார். 

சண்டை காட்சி சுமார் 10 நிமிடங்கள் நீடித்துள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை, அந்தப் பெண்ணும் அவரது கணவரும் ஒருவருக்கொருவர் புகார் அளித்தனர் என்று கோ-இ-ஃபிசா காவல் நிலையப் பொறுப்பாளர் அனில் பாஜ்பாய் கூறினார்.

அந்த நபர் தனது மனைவியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், தனது காதலி என்று முத்திரை குத்தப்பட்ட பெண்ணைக் கூட தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

ALSO READ |  உங்கள் மனைவியிடம் இந்த 5 விஷயங்களை பேசக்கூடாது -ALERT

இதற்கிடையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 294 (ஆபாசமான செயல்) மற்றும் 506 (குற்ற மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முன்னதாக, அந்த பெண், ஷாஜஹானாபாத் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது துன்புறுத்தல் மற்றும் வரதட்சணை வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அதன்பிறகு தற்போது அந்த பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார், மேலும் விசாரணைக்காக தம்பதியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண் ஹோட்டலுக்கு முன்னால் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் காரை நோக்கி ஓடி, காரின் உள்ளே அமர்ந்திருந்த பெண்ணை இழுத்து பிடித்து அடிக்க ஆரம்பித்தார். கணவன் மீது ஏற்கனவே சந்தேகம் கொண்டிருந்த மனைவி, அவரைப் பின்தொடர்ந்து, இருவரையும் கையும் களவுமாக பிடித்தார்;

ALSO READ |  Viral Video: இணையவாசிகளை கவர்ந்த ‘அத்தையின்’ கலக்கல் டான்ஸ்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News