கிணற்றின் விளிம்பில் குழந்தையை வைத்து ரீல்ஸ் எடுத்த தாய்! அதிர்ச்சி வீடியோ!

 கிணற்றின் விளிம்பிற்கு மேல் குழந்தையை தன் காலில் வைத்து கொண்டு பெண் ஒருவர் ரீல்ஸ் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 30, 2024, 01:06 PM IST
  • கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து இருக்கும் பெண்.
  • அபாயகரமாக முறையில் ரீல்ஸ் எடுக்க முயற்சி.
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
கிணற்றின் விளிம்பில் குழந்தையை வைத்து ரீல்ஸ் எடுத்த தாய்! அதிர்ச்சி வீடியோ! title=

சமூக ஊடகங்கள் மீதான அதீத ஆசையால் தானும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக கோமாளி தனமான செயல்களை செய்து வருகின்றனர். தலைகீழாக குதிப்பது, சாலையில் ஆடை இல்லாமல் நடப்பது, ரயிலில் தொங்குவது என பல விஷயங்களை செய்து வருகின்றனர். அப்படி ஒரு வித்தியாசமான அனைவரையும் கோபப்பட வைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஒரு பெண் தன்னை ஆபத்தான நிலையில் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க முயற்சி செய்கிறார். தான் மட்டும் ஆபத்தில் இல்லாமல் தன்னுடைய குழந்தையையும் ஆபத்தில் சிக்க வைக்கிறார். கிணற்றின் ஓரத்தில் உட்கார்ந்து இருக்கும் பெண்ணின் காலை குழந்தை ஒன்று இறுக்கமாக பிடித்து உள்ளது.

மேலும் படிக்க | கோவிலில் உண்டியல் காணிக்கையை திருடும் நபர்! வைரலாகும் வீடியோ!

தாய் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்ட, அதே நேரத்தில் அவரது குழந்தை தன்னை சுற்றியுள்ள ஆபத்தை உணராமல் சாதாரணமாக தாயின் கால்களை பிடித்து கொண்டு உள்ளது. ஆபத்தான முறையில் இருந்தபோதிலும், அந்த பெண் தனது குழந்தையை ரீல்ஸ்காக நடன அசைவுகளை செய்ய தூண்டுகிறார். குழந்தையும் அவரது காலை பயத்துடன் பிடித்து கொண்டு நிற்கிறது. இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில், பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். சிலர் தங்கள் ஆன்லைன் பார்வையாளர்களுக்கு ஈர்க்கக்கூடிய வீடியோவை தருவதற்காக ஆபத்தான காரியங்களை செய்வதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

ஒரு பழமையான கிணற்றின் அருகே ஒரு பெண் அமர்ந்து குழந்தையை அவரது காலை பிடிக்க வைத்து நடனமாடும் காட்சியுடன் வீடியோ தொடங்குகிறது. பின்னணியில் கேட்கும் இசைக்கு ஏற்ப அந்த பெண்ணும் நடன அசைவுகளை தருகிறார். பல பயனர்கள் இந்த வீடியோவிற்கு தங்களது கோபத்தையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். தன் உயிரை பணையம் வைப்பது மட்டும் இல்லாமல், குழந்தையின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். "இணையப் புகழைப் பெறுவதே முதன்மையான ஒரு சமூகத்தில், சில தனிநபர்கள் பெற்றோராக தங்கள் பொறுப்புகளுக்கு மேலாக தங்கள் ஆன்லைன் இருப்பை வைப்பதாகத் தோன்றுகிறது. இது போன்ற நடத்தையைக் காண்பது வருத்தமளிக்கிறது" என்று X தளத்தில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கீழே வர அடம்பிடித்த பூனை..காதை பிடித்து இழுத்து செல்லும் இன்னொரு பூனை! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News