Viral Video: சுவர்களுக்கு இடையில் சிக்கிய கருநாகம்; வீட்டை இடித்து மீட்ட வனத்துறை

Cobra Viral Videoஇரண்டு சுவர்களுக்கு இடையில் சிக்கிய நாகப்பாம்பை வீட்டை இடித்து காப்பாற்றிய சம்பவம் இணைய வாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 18, 2022, 02:25 PM IST
  • கருநாகப்பாம்பு ஒன்று இரண்டு வீடுகளின் சுவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டது.
  • வீட்டை இடித்து காப்பாற்றிய சம்பவம் இணைய வாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Viral Video: சுவர்களுக்கு இடையில் சிக்கிய கருநாகம்; வீட்டை இடித்து மீட்ட வனத்துறை  title=

இணைய உலகத்தில்  ஆச்சர்யங்களுக்கும், அதிர்ச்சிகளுக்கும் குறைவேயில்லை. இணைய உலகில் பல வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில், இரண்டு சுவர்களுக்கு இடையில் சிக்கிய நாகப்பாம்பை, வீட்டை இடித்து காப்பாற்றிய சம்பவம் இணைய வாசிகளை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கேமராவில் சிக்கிய வியத்தகு நிகழ்ச்சியில், இரண்டு சுவர்களுக்கு இடையில் சிக்கிய நாகப்பாம்பின் உயிரைக் காப்பாற்றும் இந்த சம்பவம் ஹரியானாவின் ஃபதேஹாபாத்தில் உள்ள தோஹானா பகுதியில் பதிவாகியுள்ளது.

நாகப்பாம்பு ஒன்று இரண்டு வீடுகளின் சுவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட நிலையில், சுவர்களை இடிக்காமல் வெளியே எடுக்க முடியாத வகையில் சுவர்களுக்கு இடையே நாகப்பாம்பு இருந்ததால், நாகப்பாம்பை மீட்க, வீட்டின் ஒரு பகுதியின் சுவர் மற்றும் மேற்கூரையை உடைக்க வேண்டியிருந்தது. India.com வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, “இரண்டு சுவர்களுக்கு இடையில் சிக்கிய பாம்பின் உயிரைக் காப்பாற்ற வீடு இடிக்கப்பட்டது, அற்புதமான மீட்புப் பணியைப் பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

வீடியோவை இங்கே காணலாம்:

 

 

மேலும் படிக்க | Viral Video: இரு தலைப்பாம்பிடம் சிக்கிய எலி; மனம் பதறச் செய்யும் கொடூர வீடியோ

நாகப்பாம்பு சிக்கியிருந்ததை கண்டவுடன், வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், வனவிலங்கு பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த நவ்ஜோத் தில்லான் தலைமையிலான குழு அங்கே வந்து சேர்ந்தது.  பாம்பை வெளியே எடுக்க குழுவினர் கடுமையாக முயற்சித்தனர், ஆனால் அவர்களது முயற்சிகள் பலனளிக்கவில்லை. வேறு எந்த வழியும் இல்லாத நிலையில், அந்த குழுவினர் வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று, வீட்டின் ஒரு பகுதியின் சுவர் மற்றும் மேற்கூரையை இடித்தனர். இறுதியாக கருநாகப்பாம்பு மீட்கப்பட்டது. இதற்கிடையில் நாகப்பாம்பை பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News