T20 உலகக்கோப்பை போட்டியை ஜெயிப்பது யார்? நாய்க்குட்டியின் கணிப்பு என்ன? வைரல் வீடியோ

Viral Video: 2022 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள் எவை? அரையிறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிகள் பற்றிய தகவல்களை, 'கணிக்க', மரத்திற்கும் சுவருக்கும் இடையில் பேலன்ஸ் செய்யும் நாயின் வைரல் வீடியோ 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 7, 2022, 10:56 PM IST
  • டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள் எவை?
  • அரையிறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிகள் பற்றிய ஆரூடம்
  • மரத்திற்கும் சுவருக்கும் இடையில் பேலன்ஸ் செய்யும் நாயின் வைரல் வீடியோ
T20 உலகக்கோப்பை போட்டியை ஜெயிப்பது யார்? நாய்க்குட்டியின் கணிப்பு என்ன? வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: 2022 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள் எவை? அரையிறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிகள் பற்றிய தகவல்களை, 'கணிக்க', மரத்திற்கும் சுவருக்கும் இடையில் பேலன்ஸ் செய்யும் நாயின் வைரல் வீடியோ வேடிக்கையாக இருக்கிறது. இந்த க்யூட்டான வீடியோவை, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.  

2022ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சில நாட்கள் மட்டுமே இருப்பதால், கோப்பையை எந்த அணி வெல்லும் என்பதை பலர் கணித்து யூகித்து வருகின்றனர், இந்த சலசலப்புக்கு மத்தியில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் இந்த வேடிக்கையான கணிப்பில் சேர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகிறது.

மேலும் படிக்க | Viral Video: ‘எங்களுக்கும் தெரியும்... நாங்களும் வாசிப்போம்ல’; டிரம்ஸ் வாசிக்கும் யானை! 

நெட்டிசன்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஆனந்த் மஹிந்திராவும் இந்த கணிப்பில் இணைந்துக் கொண்டார். நேற்று தனது தனிப்பட்ட டிவிட்டர் கணக்கில், ஒரு ஜாலியான வீடியோவைப் பகிர்ந்துள்ளார் மஹிந்திரா, ஒரு சுவரின் மேல் எட்டிப் பார்க்க முயற்சிக்கும் நாயின் வீடியோவை பகிர்ந்து, T20 உலகக் கோப்பை கணிப்பை கணித்துள்ளார். அந்த வீடியோ இது...

“எதிர்காலத்தைப் பார்க்கவும், #T20WorldCup2022 இன் இறுதிப் போட்டியில் யார் இருப்பார்கள் என்பதை கணிக்க முயல்கிறேன். இது நிகழ்காலத்தின் ‘சுவரை’ பார்க்க இந்த புத்திசாலித்தனமான வழியைக் கண்டுபிடித்தது. அது எதைப் பார்த்தது என்று நினைக்கிறீர்கள்?" என்று ஆனந்த் மஹிந்திரா கேட்கிறார்.

தேதி குறிப்பிடப்படாத இந்த வீடியோவில், ஒரு சுவருக்கும் மரத்திற்கும் இடையில் ஒரு நாய், கஷ்டப்பட்டு, தன்னை பேலன்ஸ் செய்துக் கொண்டே சுவருக்கு அப்பால் நடப்பதை பார்க்க முயற்சிக்கிறது. பேலன்ஸ் செய்து, மெது மெதுவாக  சுவரின் மேல் பகுதிக்கு வந்துவிட்டது. 

மஹிந்திராவின் குறும்புத்தனமான ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு ட்விட்டர் பயனர் இவ்வாறு எழுதினார், “அதை அதிகம் பார்க்க முடியவில்லை ஐயா… ஆனால் அது கேட்கக்கூடியவற்றிலிருந்து, பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் உள்ளது என்று யூகிக்கிறது… சரி, இது ஒரு யூகம் என்றாலும்… தெரியாது. எனது யூகம்: இந்தியா vs பாகிஸ்தான்”.

மேலும் படிக்க | திருநெல்வேலிக்கே அல்வாவா... கிரைம் நிருபரின் Earpod-ஐ ஆட்டை போட்ட கில்லாடி கிளி!

இதேபோன்ற உணர்வை எதிரொலித்த மற்றொரு நபர், “அது 2 பக்கத்து வீட்டுக்காரர்கள் தகராறு செய்வதைக் கண்டது/கேட்டது.. அதனால் இந்தியா/பாகிஸ்தான் இறுதியானது” என்று குறிப்பிட்டார்.

டி 20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் நிலையில், பாகிஸ்தான் அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த அரையிறுதிப் போட்டிகளில் ஜெயிக்கும் இரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் விளையாடுமா என்பதை கணிக்க முடியாத நிலையில், அனைவரும் மிகவும் ஆவலாக அரையிறுதிப் போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.  

மேலும் படிக்க | Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி' கூறிய குட்டி யானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News