Basant Panchami 2023 Date: வசந்த பஞ்சமி 2023 என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன

basant panchami 2023: வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். வசந்த பஞ்சமி நாளை ரிஷி பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைப்பர். அதேபோல் வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரசுவதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 26, 2023, 01:04 PM IST
  • வசந்த பஞ்சமி சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
  • வஸந்த பஞ்சமி அன்று மஞ்சள் நிற ஆடையில், கையில் வீணை வைத்திருக்கும் சரஸ்வதி தேவி அலங்கரித்து வழிபடுவர்.
Basant Panchami 2023 Date: வசந்த பஞ்சமி 2023 என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன title=

வசந்த பஞ்சமி 2023: இன்று வியாழக்கிழமை சுக்ல பஞ்சமி. இன்று நாடு முழுவதும் வசந்த பஞ்சமி பண்டிகை கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. பொதுவாக வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். வசந்த பஞ்சமி நாளை ரிஷி பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைப்பர். அதேபோல் வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரசுவதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது.

வசந்த பஞ்சமி எப்போது?
2023 ஆம் ஆண்டு வசந்த பஞ்சமி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. வசந்த பஞ்சமி நாள் அற்புதமான நாள். இந்த நாளில் செய்யும் செயல்கள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. பஞ்சமி திதி இன்று ஜனவரி 25 புதன்கிழமை மாலை 6.48 முதல் மறுநாள் 26.1.2023 வியாழக்கிழமை மாலை 5.11 மணி வரைக்கும் உள்ளது. வட இந்தியாவில் இந்த வசந்த பஞ்சமி திருநாளை கோயில்களிலும், வீடு, பொது இடங்கள் என சமுதாய திருநாளாக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

மேலும் படிக்க | பிப்ரவரி மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம், பம்பர் பலன்கள்

வசந்த பஞ்சமி நாளின் முக்கியத்துவம்
தென் மாநிலங்களில் ஸ்ரீ பஞ்சமி, கிழக்கு பிராந்தியங்களில் சரஸ்வதி பூஜை மற்றும் நாட்டின் வடக்கு பகுதிகளில் தென் வசந்த பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது, இந்த திருவிழா வசந்த காலத்தின் தொடக்கத்தை கொண்டாடுவதாகும். வசந்த பஞ்சமி என்பது ஒரு இந்திய பண்டிகையாகும், இது இந்து நாட்காட்டியின் படி, மாகா மாதம் ஐந்தாவது நாளில் வருகிறது. வசந்த பஞ்சமி தொடங்கியவுடன், மக்கள் திருவிழாவிற்கான தங்கள் தயாரிப்புகளையும் தொடங்குகின்றனர் ஹோலி வசந்த பஞ்சமி கொண்டாட்டத்தின் 40 நாட்களுக்குப் பிறகு வருகிறது.

பிராந்தியத்தைப் பொறுத்து, மக்கள் வசந்த பஞ்சமியை பல்வேறு வழிகளில் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக, பல இந்துக்கள் இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் சரஸ்வதி தேவியை கௌரவிக்கிறார்கள், அவர் அதன் மூல வடிவத்தில் படைப்பு ஆற்றலாகவும் சக்தியாகவும் கருதப்படுகிறார். இந்து நம்பிக்கைகளின்படி, சரஸ்வதி தேவி - கைவினை, கற்றல், அறிவு மற்றும் கலை ஆகியவற்றின் சின்னமாக இந்த நாளில் பிறந்தார். பல இடங்களில் சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு இதுவே காரணம்.

மேலும் படிக்க | Sun Transit: சூரியனின் அருளுடன் குருவருள் இணைந்தால்? நல்ல காலம் பொறக்குது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News