Mars Transit 2022: 'பெரிய மாற்றம்', 4 ராசிகளுக்கு ராஜ யோகம்

Mars Transit 2022: ரிஷப ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது 4 ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்களைக் கொண்டுவரும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 6, 2022, 10:44 AM IST
  • ஆகஸ்ட் 10 செவ்வாயின் ராசி மாற்றம் நிகழப்போகிறது.
  • வரும் நாட்களில் அதிர்ஷ்டம், பண பலன்கள்.
  • செவ்வாய்ப் பெயர்ச்சி 2022.
Mars Transit 2022: 'பெரிய மாற்றம்', 4 ராசிகளுக்கு ராஜ யோகம் title=

இந்த ஆண்டு ரக்ஷாபந்தன் ஆகஸ்ட் 11 அன்று கொண்டாடப்படும். அதன்படி ரக்ஷாபந்தனத்தன்று பெரிய ஜோதிட மாற்றம் நடைபெறுகிறது. செவ்வாய் கிரகம் கடின உழைப்பு, துணிச்சல், வலிமை, தைரியம் மற்றும் ஜாதகத்தில் வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில், கிரகங்களின் மாற்றம் அல்லது பெயர்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் தனுக்கு முன், கிரகங்களின் தளபதி செவ்வாய் கிரகத்தை ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடக்கிறார். செவ்வாய் மேஷ ராசியை விட்டு ரிஷபம் ராசிக்குள் நுழைவார். செவ்வாயின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம். 

செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம்
அந்த வகையில் செவ்வாய் கிரகம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி 2022 அன்று இரவு 9:32 மணிக்கு ரிஷப ராசியில் பயணிக்கிறார். செவ்வாய் பெயர்ச்சியால் பல ராசிகளின் தலைவிதி மாறப்போகிறது. அதன்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் ராசி மாற்றத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 

இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலனைத் தரும் 

ரிஷபம்: செவ்வாய்ப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் வலுவான முன்னேற்றம் தரும். அதேபோல்ரிஷப ராசிக்காரர்கள் புதிய வேலையில் சேரலாம். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும். திருமணமானவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல நேரம் செலவழிப்பீர்கள். 

கடகம்: செவ்வாயின் ராசி மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைத் தரும். மேலும் கடக ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பெரிய சாதனைகளைப் பெறலாம். செவ்வாயின் பெயர்ச்சி காலம் திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அவர்கள் நல்ல செய்திகளைப் பெறலாம்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய்ப் பெயர்ச்சியும் நல்ல பலன்களைத் தரும். வேலை-வியாபாரத்தில் லாபம் இருக்கும், ஆனால் குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் பெரிய பலன்களைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும், அது எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும். 

மகரம்: ரிஷப ராசியில் செவ்வாய் நுழைவதால் மகர ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பார்கள். பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் காண்பீர்கள். சில நல்ல செய்திகள் வந்து சேரலாம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News