செப்டம்பர் 24-ம் தேதி முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட பிரகாசிக்கும்

ஜோதிடத்தில் சுக்கிரன் ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரின் ராசியில் சுக்கிரன் சுகமாக இருக்கும்போது லட்சுமி தேவியின் சிறப்பு ஆசிகளைப் பெறுவார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 15, 2022, 08:05 AM IST
  • சுக்கிரன் சிறப்பு அருள் எந்த ராசிக்கு
  • சுக்கிரன் பெயர்ச்சி செப்டம்பர் 24
  • ஜோதிடத்தில் சுக்கிரன் ஒரு முக்கியமான கிரகம்
செப்டம்பர் 24-ம் தேதி முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட பிரகாசிக்கும் title=

சுக்கிரன் பெயர்ச்சி  2022: வேத ஜோதிடத்தின் படி, சுக்கிரன் ராசி மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்துடன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் கருதப்படுகிறது. மேலும் மீனம் சுக்கிரனின் உயர்ந்த ராசியாகவும், கன்னி அவர்களின் குறைந்த ராசியாகவும் கருதப்படுகிறது. அதேபோல் சுக்கிரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர்.

அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி, 2022 இரவு 08:51 மணிக்கு கன்னி ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | குரு-சந்திரன் இணைவினால் கஜகேசரி ராஜயோகம்; ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் சாதகமாக இருக்கு.

ரிஷபம்- ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிபதி சுக்கிரன் ஆவார். அத்தகைய சூழ்நிலையில், சுக்கிரன் ராசி மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் குடும்ப பிரச்சனைகளில் இருந்து இந்த ராசிக்காரர்கள் விடுபடுவீர்கள். அத்துடன் பொருளாதார நிலை மேம்படும். கௌரவம் உயரும். அதேபோல் உங்களின் சிக்கிய பணத்தை மீட்க இந்த நேரத்தில் முடியும்.

மிதுனம்- மிதுனத்தை ஆளும் கிரகம் புதன் ஆவார். புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்களுக்கு இடையே நட்பு உணர்வு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராசி மாற்றம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இதன் போது, ​​பண ஆதாயத் தொகை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். அதேபோல் எங்காவது பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

கன்னி- சுக்கிரன் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நேரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நிதி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும். வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களின் சுயமரியாதை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செப்டம்பர் 18ம் தேதிக்குள் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News