ரிஷபத்திற்கு வரும் புதன்... இந்த 3 ராசிகளுக்கு மட்டும் அடிக்கப்போகும் ஜாக்பாட்!

Mercury Transit 2023: புதன் ரிஷப ராசியில் சஞ்சரிக்க உள்ளது. இந்த சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அதுகுறித்து இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 3, 2023, 10:51 AM IST
  • வரும் ஜூன் 7ஆம் தேதி புதன் ரிஷபத்தில் பெயர்ச்சியாகிறது.
  • வரும் ஜூன் 24ஆம் தேதி வரை புதன் ரிஷபத்தில் இருப்பார்.
  • சூரியனும் ரிஷபத்தில் உள்ளதால், புதன் வரும் நிலையில் புதாதித்ய ராஜயோகம் உண்டாகும்.
ரிஷபத்திற்கு வரும் புதன்... இந்த 3 ராசிகளுக்கு மட்டும் அடிக்கப்போகும் ஜாக்பாட்! title=

Mercury Transit 2023: வேத ஜோதிடத்தின்படி, வரும் ஜூன் 7ஆம் தேதி அன்று, புதன் ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறார். சூரியன் ஏற்கனவே ரிஷப ராசியில் இருப்பதால் புதனின் ராசி மாற்றத்தால் புதாதித்ய ராஜயோகமும் உருவாகும். புதன், ஜூன் 24ஆம் தேதி வரை ரிஷப ராசியில் இருப்பார். 

இந்த நேரத்தில் 12 ராசிக்காரர்களின் பொருளாதார நிலை, தொழில், பேச்சு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றில் புதன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புத்திசாலித்தனம், பேச்சு, செல்வம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக புதன் உள்ளது. புதனின் இந்த சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். புதன் பெயர்ச்சி எந்க 3 ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்

புதனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்குப் பல வகைகளில் நன்மைகளைத் தரும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி வரும். மக்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். காதல் உறவுகள் தீவிரமாக இருக்கும். கணவன் மனைவி இடையே உறவு வலுவாக இருக்கும். பணம் சாதகமாக இருக்கும். பணவரவு அதிகரிப்பதால், உங்களின் நிதிப் பிரச்சனைகள் தீரும். நீங்கள் பணத்தை சேமிக்க முடியும். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: ஆண்டு முழுதும் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான வாழ்க்கை.... அசச்சிக்க முடியாது!!

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் துணையாக இருப்பார். நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், உங்கள் வேலை முடிவடையும். எழுத்து, ஊடகம் அல்லது பேச்சு தொடர்பான துறைகளில் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கும் இது நல்ல காலம். ஆன்மீக பயணம் செல்லலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

மகரம் 

புதனின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மிகுந்த அன்பைக் கொடுக்கும். நீங்கள் ஒருவரிடம் காதலை வெளிப்படுத்துவீர்கள், அவர் உங்களின் காதலை ஏற்றுக்கொள்வார் என்பதால் நீங்கள் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பண பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. முதலீடு மூலம் லாபம் உண்டாகும். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் ஆதாயமடைவார்கள். வணிக வர்க்கத்தினர் இந்த நேரத்தில் நல்ல பலன்களைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வக்ர சனியால் உருவாகும் ராஜயோகம்: 3 ராசிகளின் தலைவிதி மாறும்... ராஜவாழ்க்கை வாழ்வார்கள்
 

Trending News