100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகோண ராஜயோகம்! பலனை அள்ளப்போகும் ‘3’ ராசிகள்!

கேந்திர திரிகோண ராஜ்யயோகம் 2023: நவபஞ்சம் ராஜயோகத்திற்குப் பிறகு, 100 ஆண்டுகளுக்குப் பிறகு திரிகோண ராஜ்யயோகம் உருவாகிறது. இதனால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள்  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 14, 2023, 04:53 PM IST
  • தொழிலில் லாபமும், உத்தியோகத்தில் பதவி உயர்வும் கிடைக்கப் போகிறது.
  • எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
  • உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.
100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகோண ராஜயோகம்! பலனை அள்ளப்போகும் ‘3’ ராசிகள்! title=

கிரகங்கள் இயல்பாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடியவை. அந்தவகையில், செவ்வாய் தற்போது சிம்ம ராசிக்குள் சஞ்சரித்துள்ளார். இந்நிலையில், சுக்கிரன் ஏற்கனவே சிம்மத்தில் அமர்ந்துள்ளார். சுக்கிரனுடன் செவ்வாய் இணைந்துள்ளதால், கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. இதனால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதனால், பலரது தலையெழுத்து மாறும்.

சுக்கிரனுடன் செவ்வாய் இணைந்துள்ளதால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள். ஜாதகத்தில் 4, 7, 10 போன்ற 3 கேந்திர பாவங்களும், 1, 5, 9 என 3 திரிகோண பாவங்களும் பரஸ்பரம் இணையும் போது கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகும்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் சிறப்பான பலகளை பெறுவார்கள். எனினும் உங்கள் வேலையில் சற்று நிதானமாக இருக்க வேண்டும், தடைப்பட்ட உங்களின் பல வேலைகள் இந்த நேரத்தில் விரைவில் முடிவடையும். உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். நீங்கள் வேறு வேலை தேடுபவராக இருந்தால், நல்ல வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மேலும் படிக்க | கடகத்தில் உதயமாகும் புதன்... வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் ‘சில’ ராசிகள்!

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த யோகத்தால் தொழிலில் லாபமும், உத்தியோகத்தில் பதவி உயர்வும் கிடைக்கப் போகிறது. எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். இந்த ராசியில் தான் இந்த யோகம் உருவாகியுள்ளதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எனினும் முதலீடு செய்யும் போது கவனமாக முதலீடு செய்யவும்

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சற்று நிதானமாக இருக்க வேண்டும், படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். அதே நேரத்தில் பண வரவுக்கான புதிய வழிகளையும் பெறுவீர்கள். அதில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.  உஙக்ள் நிதி நிலை மேம்படும். எனினும் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். இந்த காலகட்டத்தில் பணம் தொடர்பான சில சிறப்பு பலன்களைப் பெறலாம். கல்விப் பணிகளுக்கு மகிழ்ச்சியான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வக்ர நிலையில் சனி: 3 ராசிகளுக்கு நவம்பர் 3 வரை பணக்கார யோகம்... லாபம், ஏற்றம் கைகூடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News