சூரிய பகவானின் அருளால் ‘இந்த’ ராசிக்கு பொங்கல் முதல் பொற்காலம் தான்!

மகர ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யும் நிலையில் மகர ராசிகளுக்கு மகர சங்கராந்தி முதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 15, 2023, 02:29 PM IST
  • திட்டமிட்டு பணி செய்தால், அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
  • நீங்கள் சிறிய விஷயங்களில் தேவையில்லாமல் கோபப்படுவீர்கள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு சூரியன் மகர ராசியில் நுழைவதால் ஏற்படும் பலன்கள்.
சூரிய பகவானின் அருளால் ‘இந்த’ ராசிக்கு பொங்கல் முதல் பொற்காலம் தான்! title=

மகர ராசியில் சூரியனின் சஞ்சார பலன்கள்: பிரபஞ்சத்தில் வெவ்வேறு ராசிகளில் கிரகங்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். கிரகங்களின் அரசனான சூரியனும் இதே வழியில் சஞ்சரித்து ஜனவரி 14-ம் தேதி மகர ராசியில் பிரவேசித்த பிறகு சுமார் ஒரு மாதம் வரை இந்த ராசியில் அமர்ந்திருப்பார். சூரியன் மகர ராசிக்குள் நுழைவது அனைத்து ராசிகளிலும் சில பலன்களை ஏற்படுத்தும். மகர ராசிக்காரர்களுக்கு சூரியன் மகர ராசியில் நுழைவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

திட்டமிட்டு பணி செய்தல்

மகர ராசிக்காரர்களின் ராசியில் சூரியபகவான் பெயர்ச்சி, இப்படிப்பட்ட சூழ்நிலையில் சூரியன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உதித்து, மறைவது போலவும், சூரிய பகவானைப் போல தங்களைத் தாங்களே சீராக வைத்துக் கொண்டு, எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். அப்படி திட்டமிட்டு பணி செய்தால், அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.  நீங்கள் சிறிய விஷயங்களில் தேவையில்லாமல் கோபப்படுவீர்கள். ஆனால்  கோபப்படுவதற்கு பதிலாக, அந்த ஆற்றலை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் உலகம் உங்கள் வசப்படும். வெற்றிகளை குவிப்பீர்கள். 

வேலை/வியாபாரம்

வேலை மாற இதுவே சரியான நேரம், நல்ல வாய்ப்பு கிடைத்தால் போகலாம். இந்த ராசிக்காரர்கள் அரசு, தந்தை மற்றும் முதலாளியுடன் நல்ல ஒருங்கிணைப்பைப் பெறுவார்கள். வியாபார விஷயங்களில் வெளியூர் சம்பந்தமான வேலைகள் நடக்கும். நீங்கள் வெளி நாடுகளுடன் தொடர்புடைய பொருட்களை வர்த்தகம் செய்தால், அதிக லாபம் எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் சம்பந்தமான விஷயங்களுக்காக நிலம் வாங்க நினைத்தால், இந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | மீனத்திற்கு செல்லும் ராகுவினால் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!

சோம்பலை கைவிடுவது அவசியம்

இளைஞர்கள் இப்போது சோம்பலைக் கைவிட வேண்டும், அதே நேரத்தில் தங்கள் முடிக்கப்படாத வேலையை முடிக்க இதுவே சரியான நேரம். முக்கியமான முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும், அவசரம் அல்லது கோபத்தினால் தவறான முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியம்

நோய்கள் பாதிக்காமல் இருப்பது பற்றி எச்சரிக்கையாக இருங்கள், நீங்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், வழக்கமான பரிசோதனைகளை செய்து, சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். தலைவலி இருந்தால், வழக்கமான மசாஜ் செய்யலாம். கண் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பவர்கள் ஒருமுறை கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும். யோகாவை வழக்கத்தில் சேர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | சனிப் பெயர்ச்சி 2023: பட்ட பாடு அனைத்தும் போதும் என நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பொங்கலில் உருவாகும் திரிகிரஹி யோகம்: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News