சந்திர கிரகணத்தன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

Lunar Eclipse 2024 Alert: எந்தெந்த நாடுகளில் சந்திர கிரகணம் தெரியும்? அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? கிரகணத்தின் முக்கியத்துவம் என்ன? வாருங்கள் பார்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 13, 2024, 05:37 PM IST
  • சந்திர கிரகணம் நிகழ்வு எங்கு தெரியும்?
  • கிரகணத்தால் இந்தியாவில் பாதிப்பு ஏற்படுமா?
  • சந்திர கிரகணத்தால் யாருக்கு பாதிப்பு?
சந்திர கிரகணத்தன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? title=

Chanthira Kiraganam Date and Time: சந்திர கிரகணம் எத்தனை மணிக்கு தொடங்கும். சந்திர கிரகணத்தன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? போன்ற விவரங்கள் பற்றி நாம் அறிந்துக்கொள்ளுவோம்.

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இந்த மாதம் செப்டம்பரில் நிகழ உள்ளது. இது பகுதி சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இது இந்த ஆண்டுடைய இறுதி சந்திர கிரகணமும் ஆகும்.

கிரகணம் எப்படி ஏற்படுகிறது?

புராணங்களின் படி பார்த்தால், ராகுவும் கேதுவும் சந்திரனையோ அல்லது சூரியனையோ விழுங்க முயற்சி செய்யும் பொழுது கிரகணம் ஏற்படுவதாக் கூறப்பட்டு உள்ளது. 

மறுபுறம் இதற்கு நேர்மாறாக சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்பொழுது சந்திர கிரகணம் ஏற்படும் என்று அறிவியல் விளக்குகிறது. 

ஜோதிடர்களின் கூற்றுப்படி சந்திர கிரகணம் பௌர்ணமி தினத்திலும், சூரிய கிரகணம் அமாவாசை தினத்திலும் ஏற்படும். 

சந்திர கிரகணம் நிகழ்வு எங்கு தெரியும்? 

செப்டம்பர் 18 ஆம் தேதி சந்திர கிரகணம் காலை 6 மணி 12 நிமிடங்களில் தொடங்கி, 10 மணி 17 நிமிடங்களில் முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணத்தின் உச்சம் காலை 8 மணி 14 நிமிடங்களில் இருக்கும். இந்த சந்திர கிரகணம் 4 மணி நேரம் ஐந்து நிமிடங்கள் நீடிக்கும். 

சந்திர கிரகணத்துக்கான சூத காலமானது கிரகணத்திற்கு 9 மணி நேரத்திற்கு முன் தொடங்குகிறது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 18 ஆம் தேதி சந்திர கிரகணத்திற்கான சூத காலமானது செப்டம்பர் 17 ஆம் தேதி இரவு தொடங்கும். 

கிரகணத்தால் இந்தியாவில் பாதிப்பு ஏற்படுமா?

இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் காணப்படாது என்பதால், சூத காலங்கள் பொருந்தாது. அதனால் இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணத்தால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இருக்காது. இது ஐரோப்பா ஆப்பிரிக்கா மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் தெரியும்.

மேலும் படிக்க | புதன் வலுவிழந்தா என்ன? சிம்மத்தில் சூரியன் சும்மா விட்டுடுவாரா? 4 ராசிகளுக்கு பொற்காலம் தான்!

இந்தியாவில் சந்திரன் செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று காலை 6 மணி ஆறு நிமிடங்களில் மறையும். அதே நேரத்தில் கிரகணம் காலை 6 மணி 12 மணிக்கு தொடங்கும். இதன் விளைவாக கிரகணம் தொடங்கும் நேரத்தில் சந்திரன் மறைந்துவிடும். 

சந்திர கிரகணத்தால் யாருக்கு பாதிப்பு?

எந்தவொரு கிரகணத்திற்கு முன் சூத காலம் தொடங்கும். இதில் எந்த சுபகாரியங்களும் செய்யப்படுவதில்லை. 

பொதுவாக சந்திர கிரகணத்தின் பொழுது கர்ப்பிணிப் பெண்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

கிரகணத்தின் பொழுது வீட்டுக்குள்ளேயே இருக்கவும். வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் பொழுது கத்தி அல்லது ஊசி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

இந்து மத நம்பிக்கைகளின் படி கிரகணம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், கிரகண நேரத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | சனீஸ்வரரின் நட்சத்திரப் பெயர்ச்சியால் பிரச்சனை தான்! கவலையில் கண்ணீர் விடப்போகும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News