அங்காரக தோஷத்தில் இருந்து விடுதலை! இனி 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்

Angarak Dosham: செவ்வாய் மற்றும் ராகுவால் உருவாகும் அங்காரக தோஷத்தால் கஷ்டப்பட்ட இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் இன்று முதல் மகிழ்ச்சி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 11, 2022, 10:25 AM IST
  • அங்காரக தோஷத்தால் அவதிப்பட்டவர்களுக்கு இனி நிம்மதி
  • அருள் மழை பொழிவார் செவ்வாய் பகவான்
  • பிரச்சனையை தீர்ப்பார் தோஷத்தைக் கொடுத்த ராகு
அங்காரக தோஷத்தில் இருந்து விடுதலை! இனி 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் title=

அங்கார தோஷத்தை யோகமாக மாற்றும் செவ்வாய் பெயர்ச்சி: இன்று (ஆகஸ்ட் 11ம் தேதி) முதல்அங்காரக் யோகத்தில் இருந்து விடுபடும் ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கிறது. இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்கும், பார்த்ததெல்லாம் வசப்படும். செவ்வாய் பகவான், ரிஷப ராசியில் பிரவேசித்தார். செவ்வாய் ரிஷப ராசியில் பிரவேசித்தவுடன் அங்கார தோஷம் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கான நல்ல காலம் பிறந்துவிட்டது. ஜோதிட சாஸ்திரப்படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போதோ அல்லது வேறு எந்த கிரகத்துடன் இணையும்போது, சிலாருக்கு நன்மையும், பலருக்கு தீம்பலன்களும் ஏற்படுகின்றன. கிரக பெயர்ச்சிகள் நாட்டையும் வீட்டையும் பாதிக்கிறது.

ஜூலை 27-ம் தேதி முதல் அங்கார தோஷம் உருவானது என்று சொல்லலாம். ஏனெனில் ராகு தேவன் இருக்கும் மேஷ ராசியில் செவ்வாயும் இருந்தார். இந்த இரு கிரகங்களும் ஒரே வீட்டில் இருந்ததால் ஏற்பட்ட அங்காரக தோஷத்தால், சிலருக்கு அசுப பலன்கள் ஏற்பட்டது.

மேலும் படிக்க | ஆக்ஸ்ட் மாத ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு லாபம், மகிழ்ச்சி அனைத்தும் அதிகரிக்கும் 

செவ்வாய் இன்று ரிஷப ராசிக்கு மாறிவிட்டார். அதன்பிறகு அங்கார தோஷத்தால் அவதிப்பட்டவர்களுக்கு யோகம் தொடங்கிவிட்டது.  

ரிஷபம்: ரிஷப ராசியினரின் ஜாதகத்தில் 12ம் வீட்டில் அங்காரக தோஷம் உருவாகி இருந்தது. இது, நஷ்டம் மற்றும் செலவுகளை அதிகரித்தது. இனிமேல், அந்த தோஷம் முடிவுக்கு வநது நிம்மதியும் நிவாரணமும் கிடைக்கும்.

இனிமேல், நீங்கள் பணம் சேர்க்க முடியும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தில் ஒரு புதிய ஒப்பந்தத்தை முடிக்கலாம், அதில் நல்ல பணம் சம்பாதிக்கலாம். எதிரிகளை வெல்லும் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | இன்னும் 3 நாட்களில் அங்காரக யோகம்
 
துலாம்: அங்கார தோஷத்தைக் கொண்டு வந்த செவ்வாயின் பெயர்ச்சி, அந்த தோஷத்தை தற்போது யோகமாக்குகிறது. ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் அங்காரக தோஷம் ஏற்பட்டு, காதல் விவகாரங்களில் தோல்வி அடைந்து கொண்டிருந்தீர்கள், இனி காதலில் மோதலே இருக்காது.

மாணவர்களுக்கு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், எந்த ஒரு போட்டித் தேர்விலும் வெற்றிப் பெறலாம். திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியமும் ஏற்படும்.

சிம்மம்:  ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் அங்காரக தோஷம் முடிவடைந்து, உங்களுக்கு இப்போது அதிர்ஷ்ட பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் அகன்று வேகம் அதிகரிக்கும். வணிக ரீதியிலான ஒரு பயணத்தையும் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் உங்களுக்கு பண வரத்து இருக்கும். நோய் நொடிகளில் இருந்து விடுபடுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News