’கால்பந்து உலகில் பூகம்பம்’ மெஸ்ஸி பற்றி மாடல் வெளியிட்ட ரகசியம்

பிரேசில் நாட்டின் பிரபல மாடல் சூசி கார்டஸ் பார்சிலோனா கால்பந்து வீரர்கள் பற்றி வெளியிட்டிருக்கும் ரகசியம் கால்பந்து உலகில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 8, 2022, 01:24 PM IST
  • பார்சிலோனா கால்பந்து உலகில் பூகம்பம்
  • கால்பந்து வீரர்கள் பற்றிய ரகசியம்
  • பொதுவெளியில் போட்டுடைத்த பிரபல மாடல்
’கால்பந்து உலகில் பூகம்பம்’ மெஸ்ஸி பற்றி மாடல் வெளியிட்ட ரகசியம் title=

உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணியாக இருக்கும் பார்சிலோனா அணி வீரர்கள் பற்றி அந்நாட்டின் பிரபல மாடல் கார்டெஸ் பல ரகசியங்களை பொதுவெளியில் வெளியிட்டிருக்கிறார். அவரின் இந்தப் பேட்டிக்குப் பிறகு உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர் ஜெரார்ட் பிக் மற்றும் அவரது மனைவி பாப் பாடகி ஷகிரா இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்துள்ளனர். மெஸ்ஸி பற்றியும் சில ரகசியங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார் மாடல் சூசி கார்டஸ்.

மேலும் படிக்க | தினேஷ் கார்த்திகிற்கு வாய்ப்பு வழங்கப்படுமா? டிராவிட் பதில்

பார்சிலோனா அணியின் பிரபல கால்பந்து வீரரான ஜெராட் பிக் அவரது மனைவியை விட்டு அண்மையில் பிரிந்தார். இதற்கான காரணம் இப்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, அந்நாட்டின் பிரபல மாடலான சூசி கார்டெஸ் கொடுத்த பேட்டியில், கால்பந்து வீரர் ஜெரார்ட் பிக் தனக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியதாகவும், மற்றவர்களைக் காட்டிலும் நேரடியாக தனக்கு பல குறுஞ்செய்திகளை அனுப்பினார் என்றும் தெரிவித்தார். அவரது இந்தப் பேட்டிக்குப் பிறகு ஆவேசமான பாப் பாடகி ஷகிரா, கணவர் ஜெரார்ட் பிக் தன்னை ஏமாற்றியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவருடனான திருமண உறவை முறித்துக் கொண்டார். 

அதேபேட்டியில் இன்னும் பல ரகசியங்களை பேசியிருக்கிறார் மாடல் சூசி கார்டெஸ். ஜெரார்ட் பிக் தவிர மற்ற பார்சிலோனா வீரர்களும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தெரிவித்துள்ள அவர், இரண்டு வீரர்கள் மட்டும் அத்தகைய மெசேஜ்ஜூகளை அனுப்பவில்லை எனத் தெரிவித்தார். மெஸ்ஸி மற்றும் குடின் ஹோ ஆகிய இருவரும் அவர்களது மனைவியை மிகவும் நேசிப்பவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து எந்த மெசேஜூம் வரவில்லை என மாடல் கார்டெஸ் கூறியுள்ளார்.

ஜெரார்ட் பிக் மனைவி ஷகிராவுக்கு தன்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக் கொள்தாக கூறியுள்ள மாடல் கார்டெஸ், பார்சிலோனா அணியின் முன்னாள் இயக்குநர்கள் மூலம் பிக் தனக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவர்கள் மூலம் தொலைபேசி எண்ணைக் கேட்டு ஜெரார்ட் பிக் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்தப் பேட்டிக்குப் பிறகு கால்பந்து உலகில் முன்னணி வீரர்களின் தனிப்பட்ட ஒழுக்கம் பற்றிய கேள்வி பூகம்பமாக வெடித்துள்ளது. 

மேலும் படிக்க | Naman Ojha:பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை நிதி மோசடி வழக்கில் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News