காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம்

Last Updated : Sep 8, 2017, 11:58 AM IST
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் title=

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் பங்கேற்றார். இவர் 148 கிலோ மற்றும் 172 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இந்த வெற்றி மூலம் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் அடுத்த வருடம் நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.

Trending News