இந்தோனேசிய ஓபன்: இந்திய வீரர்கள் பிரனோய் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Last Updated : Jun 17, 2017, 10:01 AM IST
இந்தோனேசிய ஓபன்: இந்திய வீரர்கள் பிரனோய் அரையிறுதிக்கு முன்னேற்றம் title=

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் விளையாட, இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர். 

கால் இறுதியில் 19வது ரேங்க் வீரர் ட்ஸூ வெய் வாங்குடன் நேற்று மோதிய காந்த் 21-15, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். 

மற்றொரு கால் இறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்குடன் (சீனா) மோதிய பிரனாய் 21-18 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 

இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சென் லாங் 21-16 என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடும் போராட்டமாக அமைந்த கடைசி செட்டில் பதற்றமின்றி விளையாடிய பிரனாய் 21-18, 16-21, 21-19 என்ற கணக்கில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதிக்கு காந்த், பிரனாய் முன்னேறியது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Trending News