IndVsSA_3rd_Test: ஆறுதல் வெற்றி பெற்றது இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது!

Last Updated : Jan 28, 2018, 08:42 AM IST
IndVsSA_3rd_Test: ஆறுதல் வெற்றி பெற்றது இந்தியா! title=

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது!

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 187 ரன்னிலும், தென்ஆப்பிரிக்கா 194 ரன்களிலும் சுருண்டன.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 247 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே தனது விக்கெட்டினை விரைவாக இழந்து வந்தது.

இந்நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 73.3 வது ஓவரில் தனது அனைத்து விக்கெடையும் 177 ரன்களுக்கு இழந்தது. இதனால் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக நடைப்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா தொடரினை கைப்பற்றிய நிலையில் இன்றைய வெற்றியானது இந்திய அணியின் ஆறுதல் வெற்றியாக கருதப்படுகிறது!

Trending News