தொடரும் தங்கவேட்டை!! உலக சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த சௌரப் சவுத்ரி

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் சௌரப் சவுத்ரி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2018, 01:52 PM IST
தொடரும் தங்கவேட்டை!! உலக சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த சௌரப் சவுத்ரி title=

கொரியாவில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் சௌரப் சவுத்ரி. இவர் சென்ற வாரம் முடிந்த ஆசிய கோப்பை போட்டியிலும் தங்கம் வென்று அசத்தினார். தற்போது மீண்டும் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்று சாதித்துள்ளார். இதில் தான் முன்பு செய்த சாதனையை தானே முறியடித்துள்ளார்.

கொரியாவில் நடந்து வரும் உலக சாம்பியன் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சௌரப் சவுத்ரி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 245.5 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். மேலும் இந்த பிரிவில் உலக சாதனை செய்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல இதே பிரிவில் அர்ஜுன் சிங் சேமா வெண்கலப் பதக்கத்தை வெனறார். இவர் 218.0 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.

Trending News