#TNBudget2019: புயலால் பாதித்த வீடுகளுக்கு மாற்று வீடு கட்ட ₹ 1,700 கோடி ஒதுக்கீடு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தர ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் OPS அறிவித்துள்ளார்! 

Last Updated : Feb 8, 2019, 01:05 PM IST
#TNBudget2019: புயலால் பாதித்த வீடுகளுக்கு மாற்று வீடு கட்ட ₹ 1,700 கோடி ஒதுக்கீடு!  title=

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தர ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் OPS அறிவித்துள்ளார்! 

2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார். 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டுவதற்கு ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. அவற்றை கீழே விரிவாக காணலாம். 

> ஏழை, நடுத்தர மக்கள் வீட்டு வசதியை பெற புதிய கொள்கை உருவாக்கி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

> சென்னை தவிர்த்த பிற நகரங்களில் 5000 கோடி மதிப்பீட்டில் வீட்டு வசதி திட்டம்.

> தமிழ்நாடு உறைவிட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது நகர்ப்புற வறுமை ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது .

> தீனதயாள் உபாத்யாயா, திட்டத்தின்கீழும், தமிழக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு

> 2011-12 ஆம் ஆண்டில் 63,178 ஆக இருந்த பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, 2018-19 ஆம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது. 

> மத்திய அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தின் பயனை அமைப்பு சாரா தொழிலாளர்களும் பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

> 2011-2012 ஆம் ஆண்டில் 1,03,600 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம் 2017-2018 ஆம் ஆண்டில் 1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது.

> பெட்ரோலிய பொருட்கள் மதுபான, பொருட்கள் விற்பனையின் மீதான வரி, வணிக வரி வருவாயில் முக்கியமான வருவாயாக உள்ளது. 2018-19 இல் 84,365.91 கோடி ரூபாயாகவும், 2019-20 இல் 96,177.14 கோடி ரூபாயாகவும் இருக்கும் என கணிப்பு.

> புதிய தொழில் நிறுவனங்களுக்காக நிலத்தேவைகள் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, திருமுடிவாக்கம் மற்றும் ஆலந்தூர் தொழிற்பேட்டைகள் விரிவுபடுத்தப்படும்.   இத்தொழிற்பேட்டைகளுக்கு சீராக மின் விநியோகம் வழங்கப்படும்.

> சென்னை, கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் இடங்களை சுத்திகரிப்பு செய்து அந்த இடங்களை மீட்டெடுப்பதற்கும் கழிவில் இருந்து. மின்சாரம் தயாரிக்கும் அலகினை அமைப்பதற்குமான திட்டத்தை அரசு - தனியார் பங்களிப்பு முறையில் 5,259.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. 

> மத்திய , மாநில அரசு பங்களிப்புடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தரப்படும்.  இதற்கு ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

> காவிரி பாசன பகுதிகளில் பருவ நிலை மாற்ற தழுவல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது. 

 

Trending News