3 தொகுதி இடைத்தேர்தல்: இறுதி பட்டியல் நாளை வெளியாகும்

Last Updated : Nov 4, 2016, 01:04 PM IST
3 தொகுதி இடைத்தேர்தல்: இறுதி பட்டியல் நாளை வெளியாகும் title=

தமிழகத்தில் தஞ்சாவூர் , அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இந்த மாதம் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மூன்று தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை இந்த 

மாதம் 22-ம் தேதி நடைபெறும். இந்த 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் அக்டோபர் 26-ம் தேதி தொடங்கியது. 3 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன.  இந்த மூன்று தொகுதிக்கும் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாள் ஆகும். நாளை மாலையே 3 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. இதை தொடர்ந்து இறுதி செய்யப்படும் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Trending News