உண்மை காதலை நிரூபிக்க தன்பெயரை மார்பில் பச்சை குத்த சொல்லி காதலியை கட்டாயப்படுத்திய இளைஞன் கைது

TATTOO : கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்மை காதலை நிரூபிக்க தன் பெயரை மார்பில் பச்சை குத்த சொல்லி காதலியை கட்டாயப்படுத்தியதாகக் காதலன் கைது செய்யப்பட்டார். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Aug 2, 2022, 08:48 PM IST
  • உண்மையாகவே நீ என்னை காதலிக்கிறாயா ?
  • காதலிக்கு தொடர் தொல்லை கொடுத்த இளைஞர்
  • பச்சை குத்த சொல்லி கம்பி எண்ணிய கதை
உண்மை காதலை நிரூபிக்க தன்பெயரை மார்பில் பச்சை குத்த சொல்லி காதலியை கட்டாயப்படுத்திய இளைஞன் கைது title=

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர், 28 வயதான இளைஞர். இவர் மார்த்தாண்டம் அருகே பூக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாகப் பழகியவர்கள், நாட்கள் பல கடந்து காதலில் விழுந்தனர். பின், காதலர்கள் இருவரும் தங்களது காதலை பல இடங்களுக்கு சென்று வளர்த்தனர். இதற்கிடையே, இளைஞருக்கு தன்காதலியின் மீது சந்தேகம் உண்டானது. விட்டு சென்று விடுவாள் என சந்தேகத்தை வரவழைத்தது. அப்போதுதான் பிரச்சினை வெடித்தது.

மார்பில் பச்சை,காதலை நிரூபிக்க தன்பெயரை மார்பில் பச்சை,காதலி,மார்த்தாண்டம் ,கன்னியாகுமரி , காதலியை கட்டாயப்படுத்தியதாகக் காதலன் கைது, தன்பெயரை மார்பில் பச்சை குத்தகட்டாயப்படுத்திய,தொடர் தொல்லை

நிஜமாகவே நீ என்னை, உண்மையாகத்தான் காதலிக்கிறாயா ? என அடிக்கடி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆரம்பத்தில் காதலன் சொல்வதை விளையாட்டாக நினைத்த மாணவிக்கு போக போக அது, புரிந்தது. ஒருகட்டத்தில் பச்சை குத்துவதில் தன் கவனத்தை செலுத்தியிருக்கிறார். என்னுடைய பெயரை உன்னுடைய மார்பில் பச்சை குத்து ; அப்போதுதான் உன் காதல் உண்மையாகும் என வார்த்தை விட்டிருக்கிறார். பச்சை குத்தவில்லை என்றால் நீ வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு என்னை ஏமாற்றி விடுவாய் என்றெல்லாம் பேச, அது மாணவிக்கு வெறுப்பை உண்டாக்கியது.

மேலும் படிக்க | புதுச்சேரியில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி

,மார்பில் பச்சை,காதலை நிரூபிக்க தன்பெயரை மார்பில் பச்சை,காதலி,மார்த்தாண்டம் ,கன்னியாகுமரி , காதலியை கட்டாயப்படுத்தியதாகக் காதலன் கைது, தன்பெயரை மார்பில் பச்சை குத்தகட்டாயப்படுத்திய,தொடர் தொல்லை

நச்சரிப்புகளுக்கு மத்தியில் மாணவி தன்காதலை முறிக்க நினைத்தும் தொடர்ந்து தொல்லைகள் தொடர்ந்தது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கல்லூரி மாணவி இதுகுறித்து தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தினர். அதன் விளைவாக மாணவியும் அவரது தந்தையும் சேர்ந்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் இளைஞரின் மீது புகாரளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட இளைஞரை பிடித்து சிறையில் அடைத்தனர். இறுதியில் உண்மை காதல் ஆராட்சியில், கம்பி எண்ணும் காதலனின் நிலை பரிதாபத்தில் முடிந்தது. 

மேலும் படிக்க | மகளை டார்ச்சர் செய்த மருமகன்..! தட்டிக்கேட்ட மாமனாரை குத்திப் போட்ட சந்தேக பேய் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News