மகளை டார்ச்சர் செய்த மருமகன்..! தட்டிக்கேட்ட மாமனாரை குத்திப் போட்ட சந்தேக பேய் !

CRIME : செங்கல்பட்டு மாவட்டம் பொன் விளைந்த களத்தூர் அருகே, மது போதையில் மாமியாரைத் தாக்கி, மாமனாரை கொன்ற, மருமகனின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Aug 2, 2022, 02:26 PM IST
  • நடு இரவில் அரங்கேறிய பயங்கரம்
  • குடித்துவிட்டு மனைவிக்கு தொடர் தொல்லை
  • தட்டி கேட்டதால் அரங்கேறிய கொடூரம்
மகளை டார்ச்சர் செய்த மருமகன்..! தட்டிக்கேட்ட மாமனாரை குத்திப் போட்ட சந்தேக பேய் ! title=

செங்கல்பட்டு மாவட்டம் பொன் விளைந்த களத்தூர், பழைய காலணி பகுதி....  இருட்டில் ஊரே அரண்டு கிடந்தது. ஊருக்குள் போலீஸ் வாகனமும், பூட்ஸ் கால்களும் நுழைந்திருந்தது. நடு இரவில் அரங்கேறிய படுபயங்கரம்தான் இப்படியொரு மயானத்திற்கு காரணம். 

இதே பகுதியைச் சேர்ந்தவர் துலுக்காணம் - சம்பூர்ணம் தம்பதி. இவர்களின் மகள் ஜெயந்தியை, 35 வயதான டார்ஜன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். இளம் வயதில் இருந்து டார்ஜனின் முதல் முக்கியத் தொழில் கள்ளச்சாராய விற்பனை. திருமணம் ஆனதும் அதைக் கைவிட்டவர், மனைவி ஜெயந்தியோடு சேர்ந்து, இரவு 10 மணிக்கு மேல், கள்ளத்தனமாக மது விற்று வந்ததாகச் செல்லப்படுகிறது. இந்நிலையில், காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், கடந்த ஆறு மாதங்களாக அவர், மது விற்பனையை கைவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் போதைக்கு அடிமையான பழக்கத்தை மட்டும் டார்ஜனால் கைவிட முடியாமல் போனது. அதுவே இன்று அவரை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு நிறுத்தியது. 

CRIME,MURDER,Chengalpattu murder, husband,wife

மதுவுக்கு அடிமையான டார்ஜன் தூக்கி எழுந்ததில் இருந்து இரவு தூங்க போகும் வரை போதையிலேயே மிதப்பது வழக்கம். இதனால் வேலைக்கு செல்லாமல் வருமானமின்றி குடும்பம் பசியிலும் மிதந்தது. ஒரு கட்டத்தில் மனைவி மீது சந்தேக புத்தியும் வளர தொடங்கியது. மனைவி ஜெயந்தியை பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவதும், பணம் கொடுக்கவில்லை என்றால் பட்டம் கட்டுவதும் என எல்லாம், எல்லை மீறி போனது. இதனால் டார்ஜனின் மீதான காதல் குறைந்து வெறுப்பு உலகத்தில் ஜெயந்தி நடைபோட தொடங்கினார். மகளின் இப்படியொரு அவல நிலையை கண்டு மன பொறுக்காத துலுக்காணம் - சம்பூர்ணம் தம்பதி, மருமகனை பல முறை கண்டித்ததாக கூறப்படுகிறது. 

CRIME,MURDER,Chengalpattu murder, husband,wife

ஆனால் போதை எதையும் விட்டுவிடவில்லை. சம்பவத்தன்று தலைக்கேறிய போதையில் தடுமாறி வந்த டார்ஜன், மனைவியின் அமைதியை உருக்குலைந்து டார்ச்சர் கொடுத்திருக்கிறார். அப்போது, அதே பகுதியில் இருப்பதால் ஜெயந்தியின் தாய்தந்தை இருவரும் உடனே மகளின் வீட்டிற்கு வந்தனர். மருகனின் ஆணவ ஆட்டத்தை இருவரும் தட்டி கேட்க, போதையில் புத்தி மாறி டார்ஜனுக்கு கொலை வெறி பிடித்தது. 

மேலும் படிக்க | புதுச்சேரியில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி

அருகிலிருந்த கட்டை எடுத்த டார்ஜன், மாமனாரையும், மாமியாரையும் பலமாக தாக்கினார். போதாது என்று கத்தியை எடுத்து மாமனாரை சரமாரியாகக் குத்தியிருக்கிறார். அதில், ஜெயந்தியின் தந்தை துலுக்காணம், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்நிலையில், சம்பவத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் படுகாயம் அடைந்த சம்பூர்ணத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு காவல்துறையினர், பிரேதத்தைக் கைப்பற்றி, தப்பி ஓடிய டார்ஜனை தேடி வருகின்றனர். மது போதையில் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கிய மருமகனின் கொடூரச் செயலால் செங்கல்பட்டு முழுக்க அரண்டு கிடக்கிறது. 

மேலும் படிக்க | மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரின் உயிர் பிரிந்தது; சாவிலும் இணைபிரியா தம்பதியர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News