நவ., 19 முதல் அண்ணா பல்கலை., தேர்வுகள்!!

Last Updated : Nov 4, 2017, 03:32 PM IST
நவ., 19 முதல் அண்ணா பல்கலை., தேர்வுகள்!! title=

சென்னையில் தொடர்ந்து கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த வாரம் முதலே கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார். 

சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவும் மழை நீடித்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதையொட்டி அண்ணா பல்கலை கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News