கோவையில் ஆட்டோ - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பலி!

கோவை சுந்தராபுரம் பகுதியில் ஷேர் ஆட்டோ மீது சொகுசு கார் மோதிய பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 1, 2018, 11:18 AM IST
கோவையில் ஆட்டோ - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பலி! title=

கோவை சுந்தராபுரம் பகுதியில் ஷேர் ஆட்டோ மீது சொகுசு கார் மோதிய பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

கோவை சுந்தராபுரத்தில் நடந்த இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும்  காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தானது இன்று காலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதில் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த சொகுசு கார், பேருந்து நிறுத்தம் அருகே நின்ற ஷேர் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில்  4 ஆண்கள், 3 பெண்கள் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் சம்பவம் பற்றி தெரியவந்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பலியானவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending News