கொரோனா படுக்கைகளை 3000-ஆக அதிகரித்தது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்!

தமிழகத்தில் அதிக கொரோனா தொற்றுகளை பதிவு செய்துள்ள சென்னையின் அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான படுக்கை திறனை அதிகரித்து, நியமிக்கப்பட்ட வசதியில் இரட்டிப்பாக்கியுள்ளது.

Last Updated : Jun 16, 2020, 06:10 PM IST
கொரோனா படுக்கைகளை 3000-ஆக அதிகரித்தது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்! title=

தமிழகத்தில் அதிக கொரோனா தொற்றுகளை பதிவு செய்துள்ள சென்னையின் அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான படுக்கை திறனை அதிகரித்து, நியமிக்கப்பட்ட வசதியில் இரட்டிப்பாக்கியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பட்டரேப்பேரும்புதூரில் உள்ள DD மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் மாகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார், அங்கு நிர்வாகம் மொத்தம் 3,000 படுக்கைகளை அமைத்துள்ளது என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

விரைவில் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு: ஹர்தீப் சிங் பூரி!...

கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், படுக்கைகளுக்கான தேவை அதிகரிப்பதை பூர்த்தி செய்யும் நோக்கில் 1,500 முதல் 3,000 வரை திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கள்கிழமை நிலவரப்படி, மாவட்டத்தில் மொத்தம் 1,922 வைரஸ்கள் பதிவாகியுள்ளன. அண்டை மாவட்டங்களான சென்னை (33,244) மற்றும் செங்கல்பட்டு (3,005) அடுத்து தொற்றுநோய்களின் எண்ணிக்கையில் மூன்றாவதாக இடம்பிடிதித்துள்ளது திருவள்ளூர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்றைய தினம் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 44 கொரோனா இறப்புகள் பதிவானது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் கடந்த இரண்டு நாட்களில் இறந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல்கள் படி ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை சுமார் 130 இறப்புகள் பதிவாகியுள்ளன.

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள மருத்துவ புல்லட்டின் படி, திங்களன்று பதிவான 1,789 வழக்குகள் உள்நாட்டு வழக்குகள், மேலும் 54 பேர் பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். தோஹா, துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தலா ஒருவரும், மலேசியாவிலிருந்து இரண்டு நபர்களும், சர்வதேச விமானங்களில் தமிழகத்திற்கு திரும்பிய மஸ்கட் மற்றும் கத்தார் நாட்டைச் சேர்ந்த தலா நான்கு பேரும் திங்களன்று கொரோனா பாதித்தோர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

10-ஆம் வகுப்பு துணை தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது...

டெல்லியைச் சேர்ந்த மூன்று பேரும், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவரும் உள்நாட்டு விமானங்கள் மூலம் பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வந்து COVID-19 நோயாளிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். சாலை மற்றும் ரயில் மூலம் மற்ற மாநிலங்களில் இருந்து திரும்பிய பயணிகளில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 18 பேர், டெல்லியைச் சேர்ந்த எட்டு பயணிகள், கர்நாடகாவைச் சேர்ந்த நான்கு பேர், கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர், ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா பாதித்தோர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News