போலீசாரைக் கண்டித்து பாஜக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!

போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த முல்லைநாதன் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Shiva Murugesan | Last Updated : Jan 21, 2022, 07:34 PM IST
போலீசாரைக் கண்டித்து பாஜக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி! title=

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முல்லைநாதன் (வயது 51). பாஜக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளராக இருக்கிறார். இவரும், சீர்காழியை சேர்ந்த ஜெயஸ்ரீ (வயது 50) என்ற பெண்ணும் காதலித்து கடந்த 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அவரது மனைவி ஜெயஸ்ரீ காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை அவரது மனைவியைக் குறித்து எந்தவித விசாரணையும் போலீசார் மேற்கொள்ளததால், தீக்குளிக்க முயன்றுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது? 
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் முல்லைநாதன் தேர்தல் பணி தொடர்பாக கோயம்புத்தூர் சென்றுள்ளார். ஏப்ரல் 1 ஆம் தேதி முல்லைநாதன் தனது மனைவி ஜெயஸ்ரீயை தொடர்பு கொண்டபோது அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இதனையடுத்து முல்லைநாதன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது மனைவி ஜெயஸ்ரீயை காணவில்லை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவையும் காணவில்லை. இதனையடுத்து அவரது மனைவியை தேடியுள்ளார். 

ALSO READ | மனைவி நடத்தையில் சந்தேகம்: கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்

ஆனால் எங்கு தேடியும் ஜெயஸ்ரீ கிடைக்காததால் மனைவி மாயமானது குறித்து முல்லைநாதன் சீர்காழி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் துரித நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் இரண்டு முறை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்துள்ளார். 

மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி: 
ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த முல்லைநாதன் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். 

அதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பில் இருந்த போலீசார் தீக்குளிக்க முயன்ற முல்லைநாதனை தடுத்து மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ | கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி, மாமியார் கைது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News