தமிழகத்தில் கூடுதலாக 23 மாவட்டங்களில் பஸ்கள் போக்குவரத்து தொடங்கியது

பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 28, 2021, 07:07 AM IST
  • தமிழகத்தில் அடுத்த கட்டமாக ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிப்பு
  • காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கம்
  • மாஸ்க் அணியாத பயணிகள் பேருந்துக்குள் அனுமதி இல்லை
தமிழகத்தில் கூடுதலாக 23 மாவட்டங்களில் பஸ்கள் போக்குவரத்து தொடங்கியது title=

தமிழகத்தில் கொரோனா தொற்றிம் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி இன்று முதல் ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் , கூடுதலாக 23 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 27 மாவட்டங்களில் 9,333 பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. 

தமிழ்நாட்டில் ஜூன் 28-ம் தேதி ஊரடங்கு (Lockdown) முடிவடைய இருந்த நிலையில் ஜூலை 5-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மாவட்டங்களை 3 ஆக வகைப்படுத்தப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கேற்ப கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் வகை இரண்டில் வகைப்படுத்தப்பட்ட 23 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஜூன் 26 ஆம் உத்தரவிட்டது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு (Public Transport) அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 23 மாவட்டங்களில் 28-ம் தேதி காலை 6 மணி முதல் பேருந்துகள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 27 மாவட்டங்களில் 50% இருக்கைகளுடன் காலை 6 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் பயணிகளுடன் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் மாஸ்க் அணியாத பயணிகளை பேருந்துக்குள் அனுமதிக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள மொத்தம் 19,290 பேருந்துகளில், மாநகர்போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,200 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 365 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,210 பேருந்துகளும்,சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 513 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப்போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,592 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின்சார்பில் 1,300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்1,153 பேருந்துகள் என மொத்தமாக 9,333 பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளது.

ALSO READ:TN Lockdown: ஜூலை 5 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மு.க. ஸ்டாலின் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News