மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரின் உயிர் பிரிந்தது; சாவிலும் இணைபிரியா தம்பதியர்

மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆறுமுகத்தின் உயிர் பிரிந்த துயர சம்பவம் உறவினர் மற்றும் கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 2, 2022, 11:25 AM IST
  • மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆறுமுகத்தின் உயிர் பிரிந்த துயர சம்பவம்.
  • மானாம்பதி சுடுகாட்டில் இருவர் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரின் உயிர் பிரிந்தது; சாவிலும் இணைபிரியா தம்பதியர் title=

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் 91 வயதான இவரின் மனைவி சுலோச்சனா இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் அனைவரும் திருமணம் ஆகிவிட்டது.இரண்டு மகன்களும் அவர்களது கணவர் பிள்ளைகளுடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகன்களுடன் ஆறுமுகமும் சுலோச்சனாவும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் வயது முதிர்வு காரணமாக கடந்து சில மாதங்களாகவே ஆறுமுகத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.

சில நாட்களாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார் அவரை சுலோச்சனா மட்டும் மகன்கள் மருமகள்கள் பேரக்குழந்தைகள் உள்ளிட்டோர் கவனித்து வந்தனர். ஆனால் சுலோச்சனா மட்டும் உங்களுக்கு முன்பாக நான் இறைவனிடம் சென்றடைய வேண்டும் என்று ஆறுமுகத்திடம் கூறிக் கொண்டே இருப்பாராம். அதற்கு ஆறுமுகமும் ஏன் அப்படி பேசுகிறாய் என கூறி சுலோச்சனாவில் மனம் கலங்காதபடி அவரை தேற்றி வந்துள்ளார்.

மேலும் படிக்க | மதுரை திருமலை நாயக்கர் மகாலில் குறும்படங்கள், போட்டோ சூட் எடுக்க நிரந்தர தடை: ASI

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் எழுந்து சுலோச்சனா தனக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்ததும் மகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து பதற்றத்துடன் ஓடி வந்து அவரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பியும், வெகு நேரம் ஆகியும் அவர் எழும்பவில்லை, அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதை அடுத்து உறவினர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தி சுலோச்சனாவின் உடலை அடக்கம் செய்வதற்காக இறுதி சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் சுலோச்சனா காலை 6 மணி அளவில் இறந்து விட்டார் என்ற  தகவலை ஆறுமுகத்திடம் உறவினர்கள் கூறினர். அந்த தகவலை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த ஆறுமுகமும் மயங்கி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளது  உறவினர்களுக்கு மேலும் பதற்றம் அதிகமானது. சிறிது நேரத்தில் ஆறுமுகத்தின் உயிரும் பிரிந்தது. 

மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆறுமுகத்தின் உயிர் பிரிந்த துயர சம்பவம் உறவினர் மற்றும் கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆறுமுகத்தின் உடலையும் அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகளையும் உறவினர்கள் செய்தனர். தம்பதியின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் முடிந்தும் ஊர்வலமாக செல்லப்பட்ட மானாம்பதி சுடுகாட்டில் இருவர் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் காலமானார்: தற்கொலையா? தொடர்கிறது விசாரணை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News