கோவை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி!

இவ்விழாவினில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Last Updated : Dec 3, 2017, 08:55 PM IST
கோவை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி! title=

கோவையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைப்பெற்றது. விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.

விழாவில் அவர் கூறியதாவது:-

ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணியில் மீன்வள துறை மந்திரி ஜெயக்குமார் முனைப்போடு ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மீனவர்கள் மீட்கப்படவில்லை என பொய்யான தகவலை சிலர் கூறிவருவது தவறானது.

தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்ன? ஆயிரம் தேர்தல் வந்தாலும் அதிமுக சந்தித்து வெற்றி பெரும்.

தென்னை விவசாயிகள் இரட்டிப்பு வருமான பெறும் வகையில் நீராபானம் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும், எனவும தெரிவித்துள்ளார்.

இவ்விழாவினில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Trending News