சமூக வலைதளங்களில் பரவும் திமுக எம்பி ராஜேஷ்குமார் பேசிய வீடியோ

மணல் அள்ளும் விஷயம் தொடர்பாக திமுக எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 27, 2022, 12:13 PM IST
  • திமுக எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பேசிய வீடியோ வைரல்
  • எந்தவொரு மாவட்ட செயலாளரும் இப்படி சொன்னதில்லை
  • கட்சிக்காரங்க மணல் அள்ளுங்கனு நான் மட்டும் தான் சொன்னேன்
சமூக வலைதளங்களில் பரவும் திமுக எம்பி ராஜேஷ்குமார் பேசிய வீடியோ title=

நான் ஒருத்தன் தான் கட்சிகாரங்கள கூப்பிட்டு மணல் அள்ளுங்கனு சொன்னேன். வேறு எந்த மாவட்ட செயலாளரும் கட்சிக்காரங்கள மணல் அள்ளுனு சொன்னது இல்லை. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் கேர்ஆர்என் ராஜேஷ்குமார் பதிவில் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க | 'தெலுங்கு பட அமைச்சர்கள்' - திமுக அமைச்சர்களை கலாய்த்த ஜெயக்குமார்!

இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த வனிதா செங்கோட்டையன் என்பவர் ராசிபுரம் அடுத்துள்ள காக்காவேரி பகுதியில் பல ஆண்டுகளாக மணல் அள்ளி வருவது கூறப்படுகிறது. திமுக ஆட்சி அமைந்து ஐந்தே மாதங்களில் இதுவரை மணல் அள்ளக் கூடாது என திமுக மாவட்ட பொறுப்பாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பதிலாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏம் நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளருமான கே.பி.ராமசாமி என்பவர் அப்பகுதியில் மணல் அல்ல எம்பி அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாகவே எம்பிக்கும் அனிதா செங்கோட்டையனுக்கும் மோதல் போக்கு இருந்தது. இந்நிலையில் மீண்டும் இது தொடர்பாக எம்பி இடம் கேட்டபோது அவரை மீண்டும் மணல் அள்ள கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் அதில் திமுகவை பொறுத்தவரை எந்த மாவட்ட செயலாளரும் கட்சியினரை மணல் அல்ல அனுமதித்தில்லை எனவும் தான் ஒருவன் மட்டுமே கட்சியினரை மணல் அல்ல அனுமதித்துள்ளதாகவும் எம்.பி.ராஜேஷ்குமார் பேசிய அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இதுதொடர்பான முழுமையான காணொளி கிடைக்கப்பெறவில்லை. திமுக கிழக்கு மாவட்ட செயலாளராக அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் திமுகவினர் சட்டவிரோதமாக மணல் அள்ளுங்கள் என எம் பி பேசிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல்வர் அவர்கள் திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்வதோ சட்டவிரோத செயல்களில் ஈடுபட கூடாது என அறிவுறுத்திய நிலையில் எம்.பி ராஜேஷ்குமார் பேசிய வீடியோ அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | எங்களையும் விடுதலை செய்யுங்கள்...முதலமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News