கொரோனா பாதிப்பு பட்டியல்: இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்த தமிழ் நாடு

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அதற்கு அடுத்த இடத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 43 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 3, 2020, 07:31 PM IST
கொரோனா பாதிப்பு பட்டியல்: இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்த தமிழ் நாடு title=

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு கோரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது என முன்னதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அதனையடுத்து தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அதற்கு அடுத்த இடத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 43 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்கள் 10.39 ஆயிரம்  பேர் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்தது இந்த கொடூர நோயில் இருந்து 2.20 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான 12 மரணங்கள் இந்தியாவின் எண்ணிக்கையை 56 ஆக உயர்த்தியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 336 புதிய வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் 14 மாநிலங்களில் இருந்து குறைந்தது 647 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன, அவை டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லிகி ஜமாஅத் சந்திப்பு தொடர்பானவை.

கடந்த மாதம் தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் நடந்த 'மார்கஸ்' சந்திப்பு நடந்த இடத்தை காலி செய்ததில் ஈடுபட்ட ஏழு டெல்லி காவல்துறையினர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். முன்னதாக இன்று, 55 வயதான ஒருவர் விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்தார். ஆந்திர மாநில அரசு கொரோனா வைரஸ் தான் மரணத்திற்கு காரணம் என்பதை உறுதிப்படுத்தியது. இது மாநிலத்தில் முதல் விபத்து. அதேநேரத்தில் கொரோனா பாதிப்பு 161 ஆக உயர்ந்துள்ளது. மார்ச் 17 அன்று தப்லிகி ஜமாஅத் சபையில் கலந்துகொண்டு புதுதில்லியில் இருந்து திரும்பிய தனது மகனிடமிருந்து இந்த நபர் நோயால் பாதிக்கப்பட்டார்.

Trending News