ஆ.ராசாவின் அவதூறு பேச்சு; நாளை நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு

அவதூறு பேச்சு குறித்து அதிமுக (ADMK) புகார் அளித்ததை தொடர்ந்து,  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது சென்னை காவல் துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 30, 2021, 11:47 PM IST
  • கொங்கு மண்டலத்தை சேர்ந்த கொங்கு வேளாளர் சமுதாய மக்களின் கூட்டமைப்புகள், திமுகவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
  • அவதூறு பேச்சு குறித்து அதிமுக (ADMK) புகார் அளித்தது.
  • முகம் சுளிக்க வகையில் அவர் பேசிய பேச்சிற்கு, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆ.ராசாவின் அவதூறு பேச்சு; நாளை நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு title=

தமிழக தேர்தல் ( TN Elections) பிரச்சாரத்தின் போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, மாலை 6 மணிக்கு, தேர்தல் ஆணையத்தின் சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளிக்க  வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, அவதூறு பேச்சு குறித்து அதிமுக (ADMK) புகார் அளித்ததை தொடர்ந்து,  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது சென்னை காவல் துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K.Palanisamy) குறித்து, மிகவும் கீழ் தரமான வகையில் ஆ.ராசா பேசிய பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. முதல்வரின் பிறப்பு குறித்து மிகவும் மோசமாக பேசியதற்கு, அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். முகம் சுளிக்க வகையில் அவர் பேசிய பேச்சிற்கு, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். சென்னையில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் பழனிசாமி. இது பற்றி குறிப்பிட்டு மனம் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டார். 

தேர்தல் நேரத்தில் முதல்வரைத் தனிப்பட்ட முறையில் திமுக (DMK) தலைவர்கள் தாக்கி பேசியது, அவர் மீது பொது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி விட்டது எனலாம். அதிலும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த கொங்கு வேளாளர் சமுதாய மக்களின் கூட்டமைப்புகள், இதற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு, எங்கள் சமுதாயத்தின் ஆதரவு திமுகவிற்கு இல்லை என பதிவு செய்துள்ளது.

ALSO READ | அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி

தாராபுரத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி  மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்குபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல்  பிரச்சாரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, திமுக - காங்கிரஸ் கூட்டணி  2ஜி ஏவுகணையை வீச பெண்கள் மீது வீசி, பெண்களை இழிவு படுத்த ஆரம்பித்துள்ளது. மரியாதைக்குரிய முதல்வரின் தாயாரை இழிவு செய்யும் அளவுக்கு அவர்களது செயல் மிக கீழ்தரமானதாக போய்விட்டது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக பெண்களுக்கு இவர்களிடம் இருந்து யார் பாதுகாப்பு தருவார்கள் என கேள்வி எழுப்பினார்.

ALSO READ | முதல்வர் பழனிச்சாமி குறித்த சர்ச்சை பேச்சு; ஆ.ராசா மீது காவல் துறை வழக்குப் பதிவு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News