அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை அரசு இல்லம் மற்றும் கரூரில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Jun 13, 2023, 09:56 AM IST
  • அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை.
  • அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது.
  • சென்னையில் உள்ள அரசு பங்களாவிலும் சோதனை.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை! title=

சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  கடந்த சில தினங்களுக்கு முன்பாக வருமானவரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்க துறையினர் சோதனை. செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற 8 நாட்கள் சோதனையை தொடர்ந்து தற்போது அவரது கரூர் வீட்டிலும், சென்னை பட்டினப்பாக்கம் அரசு பங்களாவிலும் சோதனை நடைபெறுகிறது.  தமிழகத்தில் மதுபான மற்றும் மின்சார ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு சொந்தமான மற்றும் நெருக்கமானவர்களின் இடங்களில் வருமானவரித்துறை சோதனை கடந்த மாதம் நடைபெற்றது.  பல்வேறு இடங்களில் 5 நாட்களுக்கும் மேல் சோதனை தொடர்ந்து நடைபெற்றது.  

மேலும் படிக்க | திமுக திட்டங்களுக்கு பெயர் சூட்டிய அதிமுக பேச என்ன தகுதி இருக்கிறது? - முதலமைச்சர்

மூன்று கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அரசு ஒப்பந்ததாரர் எம் சி சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான ஆல்ஃபண்ட் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வீடு, தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி எதிரில் அமைந்துள்ள சுரேந்தர் மெஸ் உணவகத்தில் அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் சோதனை செய்தனர்.  செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அரசு அதிகாரிகளின் கார்களை அடித்து உடைத்தனர்.  இந்த சம்பவங்கள் குறித்து பேசிய செந்தில் பாலாஜி, வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். வருமானவரித்துறையினர் திடீரென சோதனையிட வந்ததால் சில அசம்பாவித சம்பவபங்கள் நடைபெற்றதாகவும், ஆனால் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்து இருந்தார். 

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அமலாக்க இயக்குனரகம் சார்பில் 2021 ஆம் ஆண்டில், இந்த ஊழல் தொடர்பாக நான்கு வழக்குகளை பதிவு செய்தது. இதில் இரண்டு வழக்குகள் அரசுப் போக்குவரத்துத் துறையில் பேருந்து நடத்துனர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் மற்ற இரண்டு வழக்குகள் ஓட்டுநர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் நியமனம் தொடர்பானவை.  வருமானத்துறை செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி வீட்டிலேயே தற்போது சோதனை செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமலாக்கத்துறை சோதனை குறித்து, IT ஆக இருந்தாலும், ED ஆக இருந்தாலும், எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டாலும் உரிய விளக்கம் தருவோம் என அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்க | ’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ டிவிட்டரில் டிரெண்ட் செய்த அதிமுக - காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News