கள்ளக்காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

சேலம் அம்மாபேட்டை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சத்யா இவருக்கும் சதீஷ்குமார் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2021, 12:09 PM IST
கள்ளக்காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை title=

சேலம் அம்மாபேட்டை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சத்யா இவருக்கும் சதீஷ்குமார் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் 4 வருடத்துக்கு முன்பு நடைபெற்ற திருமணத்தில் சத்யாவுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சத்யாவின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது இதனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காவல் நிலையம் மூலம் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

ALSO READ | மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் மாணவர்கள் போராட்டத்துக்குப் பின் பணியிடை நீக்கம்

அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரும் சத்யாவும் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பல்நோக்கு ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர் அப்போது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது இதனால் கணவனை பிரிந்த சத்தியா முழுநேரமாக விஷ்ணுவுடன் பொழுதை கழித்து வந்துள்ளார்

இதனிடையே விஷ்ணுவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் சத்யா தன்னை விட்டு விட்டு திருமணம் செய்யக்கூடாது என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது சத்யாவின் மீதிருந்த காதலால் சத்யாவை விட்டு பிரிய முடியாத விஷ்ணு பெற்றோர்களிடம் இது குறித்து ஏதும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வந்துள்ளார் .

இந்த நிலையில் இருவரும் இனி வாழ முடியாது என்று முடிவு செய்த பின்னர் இன்று அதிகாலை பாண்டிச்சேரியில் இருந்து சேலம் (Salem) வந்த எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பொன்னாம்மா பேட்டை பகுதியில் ரயில் முன்புப்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்

 இந்த விபத்தில் இருவரின் உடல்களும் சிதறியது சம்பவம் அறிந்த ரயில்வே காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து பிரேத கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சினிமாவை மிஞ்சும் வகையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ | புதுச்சேரி: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News