NIGHT SHIFT செல்ல CAB-கிற்கு காத்திருந்த IT பெண்களுக்கு நேர்ந்த கதி - CCTV வீடியோ !!

அம்பத்தூரில் இரவு பணிக்கு செல்ல காத்திருந்த IT பெண் ஊழியரிடம் காரில் வந்த இளைஞர்கள் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி...

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 5, 2022, 03:58 PM IST
  • இரவு நேரத்தில் அரங்கேறிய அராஜகம்
  • இளம்பெண்களிடம் அத்துமீறிய ஆண்கள்
  • தடுக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல்
NIGHT SHIFT செல்ல CAB-கிற்கு காத்திருந்த IT பெண்களுக்கு நேர்ந்த கதி - CCTV வீடியோ !! title=

சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ஹோட்டல் அருகே இரவு பணிக்குச் செல்ல  IT பெண் ஊழியர்கள் இருவர் கம்பெனி வாகனத்திற்காகக் காத்திருந்தனர். அப்போது ஹூண்டாய் காரில் வந்த போதை ஆசாமிகள் 3 பேர், இளம்பெண்களிடம் வீண் தகராறு செய்திருக்கிறார். அப்போது அதை தட்டி கேட்ட ஒரு பெண்ணின் விலையுயர்ந்த செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்திருக்கிறார்கள். பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போன இளம்பெண்களை காப்பாற்ற யாரும் வரவில்லை. இதற்கிடையே அங்கு நின்றிருந்த இன்னொரு பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் கால் செய்திருக்கிறார்.

அம்பத்தூரில் இரவு பணிக்கு செல்ல காத்திருந்த, IT பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி, மிரட்டல், செல்போன் உடைப்பு, ஐடி பெண்களிடம் அத்துமீறிய ஆண்கள், இளம்பெண்களிடம் அத்துமீறிய ஆண்கள்,சிசிடிவி காட்சி, அம்பத்தூரில், இரவு பணிக்கு, நைட் சிப், பெண்கள், ஐடி பெண்கள்,ஐடி

உடனே சம்பவ இடத்திற்கு பிரபாகரன் என்ற காவலர் விரைந்து வந்திருக்கிறார். அப்போது புகை பிடித்து கொண்டிருந்த 3 இளைஞர்களையும் விசாரித்திருக்கிறார். அடாவடித் தனமாக பதிலளித்தவர்களைக் காவலர் அதட்ட ; அதில், காவலரையும் தாக்கியிருக்கிறார்கள். இளைஞர்களின் அட்டகாசத்தை வீடியோ எடுக்க முயன்ற போது, காவலரின் செல்போனையும் பிடுங்கி உடைத்திருக்கிறார்கள். இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் அரங்கேறிய சம்பவத்தால் அந்த இடமே அரண்டு போனது.

அம்பத்தூரில் இரவு பணிக்கு

இதனையடுத்து அப்பெண்களின் கம்பெனி கார் வர, அவர்கள் அதில் ஏறி சென்றனர். இளைஞர்களும் அவர்கள் வந்த காரை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பித்தனர், பின்னர், காவலர் பிரபாகரன் கொடுத்த தனி அறிக்கையின் பேரில் அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பலம் பொருந்திய காவலர்களை வைத்து தனிப்படை அமைத்தார். இளைஞர்கள் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை தொடங்கப்பட்டது. அதில், அந்த கார் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அதை டெலிவரிக்கு கொடுத்திருப்பதும் பிரபு என்பவர் எடுத்து சென்றதும் தெரியவர, போலீசார் பிரபுவை சுற்றி வளைத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் குத்திய கணவர் ; ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி!

அம்பத்தூரில் இரவு பணிக்கு

அவரை பிடித்து விசாரிக்க அவருடன் வந்த சூர்யா மற்றும் சிவகுமார் என்ற இவரும் வசமாக சிக்கி கொண்டனர். இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இரவு நேரத்தில் ஐடி பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த சம்பவத்தால் அப்பகுதி பெண்கள் பெரும் அச்சத்தில் மூழ்கி கிடக்கின்றனர்.

மேலும் படிக்க | கணவரின் ஒர்க்‌ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தவரை காதலனாக்கிய பெண் - கட்டிலுக்காக கொலைகாரியான கதை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News