சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 2 பேர் பலி

சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்ரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Last Updated : May 30, 2019, 09:46 AM IST
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 2 பேர் பலி title=

சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்ரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள துலுக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பட்டாசு தயாரிப்பு அறை மிகவும் சேதமடைந்தது. தற்போது இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News