இந்திய கடற்படை துப்பாக்கிச்சூட்டில் மீனவர் காயம் - நிவாரணம் அறிவித்த முதல்வர்

இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 21, 2022, 06:20 PM IST
  • தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு
  • காயமடைந்த மீனவர் மருத்துவமனையில் அனுமதி
  • முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரண உதவி
 இந்திய கடற்படை துப்பாக்கிச்சூட்டில் மீனவர் காயம் - நிவாரணம் அறிவித்த முதல்வர் title=

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில், மீனவர் வீரவேலுவுக்கு காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வீரவேலுவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த காசிராஜன் என்பவரது மகன் மீனவர் வீரவேல், இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மேலும் படிக்க | இந்திய கடற்படை மீது கொலை முயற்சி வழக்கு பதியுங்கள் - சீமான் வலியுறுத்தல்

சம்பவத்தில் காயைமடைந்த வீரவேல், சிகிச்சைக்காக உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தவர்கள் பலி - ஸ்ரீபெரும்புதூரில் சோகம்

முன்னதாக, “இந்திய கடற்படை அளித்த விளக்கத்தில், இந்தியா-இலங்கை சர்வதேச எல்லைக்கு அருகே பால்க் விரிகுடாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமான படகு தென்பட்டது. பலமுறை எச்சரித்தும் மீனவர்கள் படகை நிறுத்தவில்லை. அதனால் வழக்கமான நடைமுறையின்படி படகை நிறுத்தும் வகையில் எச்சரிக்கைக்காக சுடப்பட்டது” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சிறுத்தை உயிரிந்த விவகாரம்; தேனியின் தோனிக்கு வனத்துறை சம்மன்!

மேலும் படிக்க | ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் - அதிரடி சோதனையில் இறங்கிய அலுவலர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News