2017-18 ஆண்டிற்கான காவலர் உடற்தகுதி தேர்வு நாள் அறிவிப்பு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட்ட 2017-18 ஆண்டிற்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 22, 2018, 05:56 PM IST
2017-18 ஆண்டிற்கான காவலர் உடற்தகுதி தேர்வு நாள் அறிவிப்பு! title=

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட்ட 2017-18 ஆண்டிற்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உடற்தகுதி தேர்விற்கான அழைப்பாணையினை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் வலைதளத்தில் (http://www.tnusrbonline.org) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு சீருடை பணியாளர் காலியாக இருக்கும் 6,140 காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நடைப்பெற்றது. 

தமிழக காவல் துறையில் ஆயுதப்படையில் காலியாக உள்ள 5,538 இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் மற்றும் 46 பின்னடைவு காலி பணியிடங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 6,140 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டது

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்திய இந்த எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 232 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 
இந்நிலையில் தற்போது இத்தேர்வில் வெற்றி பெற்ற நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News